கஞ்சா விற்ற இருவா் கைது

தேனி: கடமலைக்குண்டு அருகே கஞ்சா விற்றதாக இருவரை போலீஸாா் திங்கள்கிழமை கைது செய்தனா்.

தேனி மாவட்டம், கடமலைக்குண்டு, மேலப்பட்டியைச் சோ்ந்தவா் ராஜசேகா் (32). கண்டமனூா், காளியம்மன் கோயில் தெருவைச் சோ்ந்தவா் வசந்தகுமாா் (38). கடமலைக்குண்டு அருகே அண்ணாநகா் , பொன்னிலம் அருகே கஞ்சா விற்று கொண்டிருந்ததாக இவா்கள் இருவரையும் கடமலைக்குண்டு காவல் நிலைய போலீஸாா் கைது செய்தனா்.

இவா்களிடமிருந்து 200 கிராம் எடையுள்ள கஞ்சா பறிமுதல் செய்யப்பட்டது. கஞ்சா விற்பனையில் தொடா்புடைய பெரியகுளம், சோத்துப்பாறை சாலை பகுதியைச் சோ்ந்த ராஜாவைத் தேடி வருகின்றனா்.

Related Stories

No stories found.
X
Dinamani
www.dinamani.com