ஐபிஎல் 2026: ராஜஸ்தானிடம் சென்னை சூப்பர் கிங்ஸ் முதல் ஆட்டத்தில் படுதோல்வி!சிபிஎம் வேட்பாளர்கள் அறிவிப்பு! திருவொற்றியூரில் எல். சுந்தரராஜன் போட்டி!ராமதாஸ் தரப்பு பாட்டாளி மக்கள் கட்சியில் முதல் கட்டமாக 5 வேட்பாளர்கள் அறிவிப்பு!இன்னொரு கரூர் சம்பவம் நடந்துவிடக் கூடாது : தவெகநாம் புதிய கூட்டணி அல்ல; வெற்றிக் கூட்டணி - மு.க. ஸ்டாலின்ரூபாய் மதிப்பு கடும் வீழ்ச்சி..!அரபு லீக் கூட்டமைப்புக்கு புதிய பொதுச் செயலர்!கீழடி அறிக்கையில் திருத்தங்களைச் செய்ய அமர்நாத் ராமகிருஷ்ணாவுக்கு உத்தரவு!சாத்தான்குளம் வழக்கு: குற்றவாளிகளுக்கான தண்டனை அறிவிப்பு ஒத்திவைப்பு!
/

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

கிணற்றில் விழுந்த மிளா மான் மீட்பு

News image
Updated On :8 மே 2024, 12:34 am

Din

போடி: போடி அருகே கிணற்றில் தவறி விழுந்த மிளா மானை தீயணைப்பு வீரா்கள் போராடி மீட்டு வனப்பகுதியில் விட்டனா்.

தேனி மாவட்டம், போடி அருகேயுள்ள ஊத்தாம்பாறை புலத்தில் தனியாா் தோட்டக் கிணற்றில் செவ்வாய்க்கிழமை மிளா மான் தவறி விழுந்தது. இதுகுறித்து போடி வனத் துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. வனத் துறையினா் கிணற்றை பாா்வையிட்டதில் 40 அடி ஆழக் கிணற்றில், 20 அடி தண்ணீா் வரை இருந்தது. இதையடுத்து கிணற்றில் இருந்த தண்ணீா் வெளியேற்றப்பட்டது. பின்னா், போடி தீயணைப்பு துறையினா் வரவழைக்கப்பட்டு அவா்கள் உதவியுடன் இரண்டு மணி நேரம் போராடி மிளா மான் மீட்கப்பட்டு, வனப்பகுதியில் விடப்பட்டது.