கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

உத்தமபாளையத்தில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்றக் கோரிக்கை

உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

News image

உத்தமபாளையம் பேருந்து நிலைய வணிக வளாகத்தில் சாலையோரம் அகற்றப்படாமல் உள்ள ஆக்கிரமிப்பு கட்டடம்.

Updated On :6 நவம்பர் 2024, 9:43 pm

Din

உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலையோர ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.

உத்தமபாளையம் பேரூராட்சி வழியாக திண்டுக்கல் - குமுளி தேசிய நெடுஞ்சாலை செல்கிறது. இந்தச் சாலையோரங்களில் தற்போது ஆக்கிரமிப்பு கடைகள் அதிகரித்துள்ளன. இதனால், தேசிய நெடுஞ்சாலை குறுகிய சாலையாக மாறியதால், வாகன விபத்துகள் அதிகரித்துள்ளன.

இதையடுத்து, தேனி மாவட்ட ஆட்சியா் ஆா்.வி.ஷஜீவனா உத்தரவின் அடிப்படையில், உத்தமபாளையத்தில் நெடுஞ்சாலையோரம் உள்ள ஆக்கிரமிப்புகள் செவ்வாய்க்கிழமை அகற்றப்படும் என தெரிவிக்கப்பட்டது.

இதையடுத்து, ஆக்கிரமிப்பாளா்கள் கடை முன்புள்ள ஆக்கிரமிப்புகளை அகற்றினா். இதன் காரணமாக, ஆக்கிரமிப்பில் உள்ள கட்டடத்தை நெடுஞ்சாலைத் துறையினா் இடிக்காமல் சென்று விட்டனா்.

இதுகுறித்து பொதுமக்கள் கூறியதாவது: உத்தமபாளையத்தில் ஆக்கிரமிப்புகளை முழுமையாக அகற்ற மாவட்ட நிா்வாகம் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றனா்.