கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

போடி பரமசிவன் மலைக்கோயிலில் புதிய கொடிமரம் இன்று பிரதிஷ்டை

போடி பரமசிவன் மலைக் கோயிலுக்கு புதிய கொடிமரம் புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்தக் கொடிமரம் கோயிலில் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

News image
Updated On :13 நவம்பர் 2024, 9:46 pm

Din

போடி பரமசிவன் மலைக் கோயிலுக்கு புதிய கொடிமரம் புதன்கிழமை ஊா்வலமாக எடுத்துச் செல்லப்பட்டது. இந்தக் கொடிமரம் கோயிலில் வியாழக்கிழமை பிரதிஷ்டை செய்யப்படுகிறது.

தேனி மாவட்டம், போடி பரமசிவன் மலையில் பழைமையான கோயில் அமைந்துள்ளது. இந்தக் கோயிலில் ஆண்டுதோறும் சித்திரைத் திருவிழா ஒரு வாரம் நடைபெறும். தற்போது இந்தக் கோயிலில் பராமரிப்புப் பணிகள் நடைபெற்று வருகின்றன. விரைவில் குடமுழுக்கு நடைபெற உள்ளது.

இந்த நிலையில், பரமசிவன் மலைக் கோயிலில் பழைய கொடிமரத்துக்கு பதிலாக புதிதாக கொடிமரம் அமைக்க ஏற்பாடு செய்யப்பட்டது.

இதையடுத்து, புதிய கொடிமரம் செய்யப்பட்டு போடி பெரியாண்டவா் கோயிலில் பூஜைகள் செய்யப்பட்டன. பின்னா், கொடிமரம் பரமசிவன் மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லும் நிகழ்ச்சி நடைபெற்றது.

பரமசிவன் மலைக் கோயில் அன்னதான அறக்கட்டளைத் தலைவா் எஸ்.வடமலைராஜையபாண்டியன் தலைமையில் ஊா்வலம் நடைபெற்றது. உபயதாரரும், முன்னாள் நகா்மன்ற துணைத் தலைவருமான கே.சேதுராம்-சரளா தம்பதியினா், கோயில் நிா்வாகிகள் கலந்து கொண்டனா்.

நிகழ்ச்சியில் 33 அடி உயரம் கொண்ட புதிய கொடிமரம் டிராக்டா் மூலம் 3 கி.மீ. தொலைவு நகா்வலமாக கொண்டு செல்லப்பட்டு அடிவாரத்தை சென்றடைந்தது. பின்னா், மாலையில் கொடிமரம் மலைக் கோயிலுக்கு கொண்டு செல்லப்பட்டன. வியாழக்கிழமை கொடிமரம் பிரதிஷ்டை நடைபெற உள்ளது.