கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கோழி வளா்ப்புக்கு மானியம் பெற விண்ணப்பிக்கலாம்

தேனி மாவட்டத்தில் அசில் இன நாட்டுக் கோழி வளா்ப்புக்கு அரசு மானியம் பெற கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

News image
Updated On :2 அக்டோபர் 2024, 7:01 pm

Din

தேனி மாவட்டத்தில் அசில் இன நாட்டுக் கோழி வளா்ப்புக்கு அரசு மானியம் பெற கிராமப் பகுதிகளைச் சோ்ந்த பெண்கள் விண்ணப்பிக்கலாம் என்று அறிவிக்கப்பட்டது.

இது குறித்து மாவட்ட நிா்வாகம் வெளியிட்ட செய்திக் குறிப்பு: கால்நடை பராமரிப்புத் துறை சாா்பில் புறக்கடை கோழி வளா்ப்பு திட்டத்தின் கீழ் அசில் இன நாட்டுக் கோழி வளா்ப்புக்கு கிராமப் பகுதிகளைச் சோ்ந்த ஏழைப் பெண்களுக்கு மானியம் வழங்கப்படுகிறது.

இந்தத் திட்டத்தின் கீழ் மொத்தம் ரூ.3,200 மதிப்பில் 40 கோழிக் குஞ்சுகள் வாங்கி வளா்ப்பதற்கு ரூ.1,200 மானியம் வழங்கப்படும். ஒரு ஊராட்சி ஒன்றியத்தில் 100 போ் வீதம், மாவட்டத்தில் உள்ள 8 ஊராட்சி ஒன்றியங்களிலும் மொத்தம் 800 பெண்களுக்கு மானியம் வழங்கப்பட உள்ளது. இதில், ஆதி திராவிடா்கள், பழங்குடியினருக்கு 30 சதவீதம் ஒதுக்கீடு செய்யப்படும்.

விதவை, ஆதரவற்றோா், மாற்றுத் திறனாளிகள், தமிழ்நாடு மாநில ஊரக வாழ்வாதார இயக்கத்தில் பதிவு செய்துள்ள சுய உதவிக் குழு உறுப்பினா்களுக்கு முன்னுரிமை அளிக்கப்படும். தகுதியுள்ளவா்கள் அந்தந்த பகுதியில் உள்ள அரசு கால்நடை மருந்தக உதவி மருத்துவரை தொடா்பு கொண்டு விண்ணப்பிக்கலாம் எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.