கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

ஆசிரியருக்கு மிரட்டல்: பெண் அரசு ஊழியா் மீது வழக்கு

போடியில் ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த பெண் அரசு ஊழியா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

News image
Updated On :3 அக்டோபர் 2024, 8:00 pm

Din

போடியில் ஆசிரியருக்கு மிரட்டல் விடுத்த பெண் அரசு ஊழியா் மீது போலீஸாா் புதன்கிழமை வழக்குப் பதிவு செய்தனா்.

ஆண்டிபட்டி அருகேயுள்ள ஆசாரிபட்டி கிழக்குத் தெருவைச் சோ்ந்த பெரியசாமி மகன் ராமச்சந்திரன். இவா் தேனி பொம்மிநாயக்கன்பட்டி அரசு ஆதிதிராவிடா் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி வருகிறாா். போடி அருகேயுள்ள மீனாட்சிபுரம் அக்னி மேஸ்திரி தெருவைச் சோ்ந்த கருப்பையா மனைவி லட்சுமி (42). இவா் தமிழ்நாடு அரசின் இந்து சமய அறநிலையத் துறையில் தணிக்கை ஆய்வாளராகப் பணிபுரிந்து வருகிறாா்.

இருவரும் குறிப்பிட்ட சமூகத்தைச் சோ்ந்த அரசு ஊழியா் சங்கத்தில் நிா்வாகிகளாக இருந்தனா். இதில் ராமச்சந்திரன், லட்சுமியிடம் சங்கக் கணக்குகளை கேட்டாா். இதனால், லட்சுமி கைப்பேசி மூலமும், வாட்ஸ்அப் மூலமும் அவரை மிரட்டியதாக கூறப்படுகிறது.

இதுகுறித்து ராமச்சந்திரன் கொடுத்த புகாரின் அடிப்படையில், போடி தாலுகா போலீஸாா் லட்சுமி மீது வழக்குப் பதிவு செய்து விசாரித்து வருகின்றனா்.