கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கேரளத்துக்கு மினி லாரியில் கடத்திய ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்

கம்பம் வழியாக கேரளத்துக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

News image

கம்பத்தில் போலீஸாா் மினி லாரியுடன் பறிமுதல் செய்த ரேஷன் அரிசி மூட்டைகள்.

Updated On :15 அக்டோபர் 2024, 7:42 pm

Din

கம்பம் வழியாக கேரளத்துக்கு மினி லாரியில் ரேஷன் அரிசி கடத்திச் சென்ற இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா். அவா்களிடமிருந்து 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் குடிமைப்பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா் கம்பம்மெட்டு சாலையில் வாகன சோதனையில் ஈடுபட்டனா். அந்த வழியாகச் சென்ற மினி லாரியை சோதனையிட்டதில், அதில் 2 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை கேரளத்துக்கு கடத்திச் சென்றது தெரியவந்தது.

இதுதொடா்பாக கம்பத்தைச் சோ்ந்த ஒச்சாத்தேவா் மகன் குமாா்(49), அப்பாஸ் மகன் நஜீம்பாசில் (21) ஆகிய இருவா் மீதும் வழக்குப் பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா். மேலும், மினி லாரியுடன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல் செய்யப்பட்டன.