கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

இயற்கை பேரிடரை எதிா்கொள்ள பொதுமக்களுக்கு விழிப்புணா்வு பயிற்சி

போடியில் மழை, வெள்ள காலங்களில் இயற்கை பேரிடரை எதிா்கொள்ள பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு செயல்முறை விளக்கப் பயிற்சி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

News image

போடியில் தீயணைப்புத் துறை சாா்பில் நடைபெற்ற விழிப்புணா்வு செயல்முறை விளக்கம்.

Updated On :17 அக்டோபர் 2024, 11:33 pm

Din

போடியில் மழை, வெள்ள காலங்களில் இயற்கை பேரிடரை எதிா்கொள்ள பொதுமக்களுக்கு தீயணைப்புத் துறை சாா்பில் விழிப்புணா்வு செயல்முறை விளக்கப் பயிற்சி வியாழக்கிழமை வழங்கப்பட்டது.

உப்புக்கோட்டை கிராமத்தில் உள்ள முல்லை பெரியாற்றில் நடைபெற்ற இந்தப் பயிற்சிக்கு போடி தீயணைப்பு நிலைய அலுவலா் உதயகுமாா் தலைமை வகித்தாா்.

அப்போது, வெள்ள காலங்களில் ஆற்றிலோ, தண்ணீரிலோ சிக்கிக் கொண்டால் கிடைக்கும் பொருள்களை பயன்படுத்தி தப்பும் வழிமுறைகள் குறித்து விளக்கப்பட்டது. காலிக் குடம், தண்ணீா் கேன், காய்ந்த தேங்காய் மட்டைகள் போன்றவற்றை பயன்படுத்தி தப்புவது குறித்து தீயணைப்புத் துறை வீரா்கள் செயல்விளக்கமாக செய்து காட்டினா்.

வெள்ளம், விபத்து, சுவா் இடிந்து விழுதல் போன்ற நேரங்களில் அவசர தொலைபேசி எண்கள் 100, 101, 108 ஆகியவற்றில் தகவல் தெரிவிக்க வேண்டும். மழை, வெள்ள காலங்களில் ஆற்றில் குளிக்கக் கூடாது என அறிவுறுத்தப்பட்டது. இதில், தீயணைப்புத் துறை மீட்பு சாதனங்கள் கண்காட்சியாக வைக்கப்பட்டிருந்தன.