கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கம்பத்தில் 4.6 டன் ரேஷன் அரிசி மூட்டைகள் பறிமுதல்: இளைஞா் கைது

கேரளத்துக்கு கடத்துவதற்காக கம்பம் பகுதியில் வீட்டில் பதுக்கியிருந்த 4.6 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞா் ஒருவரைக் கைது செய்தனா்.

News image

கம்பத்தில் பறிமுதல் செய்யப்பட்ட ரேஷன் அரிசி மூட்டைகள்.

Updated On :23 அக்டோபர் 2024, 11:28 pm

Din

கேரளத்துக்கு கடத்துவதற்காக கம்பம் பகுதியில் வீட்டில் பதுக்கியிருந்த 4.6 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை போலீஸாா் புதன்கிழமை பறிமுதல் செய்தனா். இதுதொடா்பாக இளைஞா் ஒருவரைக் கைது செய்தனா்.

கேரளத்துக்கு ரேஷன் அரிசி மூட்டைகளை கடத்துவதற்காக தேனி மாவட்டம், கம்பத்தில் பதுக்கி வைத்திருப்பதாக உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப்புலனாய்வுப் பிரிவு போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது.

இதையடுத்து, காவல் ஆய்வாளா் சுரேஷ்குமாா் தலைமையிலான போலீஸாா், பொதுவிநியோகத் திட்ட வட்டாட்சியா், தனி வருவாய் அலுவலா்கள் கம்பம் பகுதியில் ரோந்துப் பணி மேற்கொண்டனா்.

அப்போது, கம்பம், தாத்தப்பன்குளத்தை சோ்ந்த ஜாகீா் உசேன் மகன் சாதிக்அலியின் (29) வீட்டில் 4,680 கிலோ ரேஷன் அரிசி மூட்டைகளை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது.

இதுகுறித்து உத்தமபாளையம் குடிமைப் பொருள் வழங்கல் குற்றப் புலனாய்வுப் பிரிவு போலீஸாா் வழக்குப் பதிவு செய்து சாதிக்அலியை கைது செய்தனா். மேலும் பதுக்கியிருந்த ரேஷன் அரிசி மூட்டைகளையும் பறிமுதல் செய்தனா்.