கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

தேனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்புப் பிரிவு போலீஸாா் சோதனை

தேனி ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

News image

தேனி சாா் பதிவாளா் அலுவலகத்தில் புதன்கிழமை, சோதனையில் ஈடுபட்ட ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா்.

Updated On :23 அக்டோபர் 2024, 11:43 pm

Din

தேனி ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகத்தில் உள்ள சாா் பதிவாளா் அலுவலகத்தில் ஊழல் தடுப்பு, கண்காணிப்புப் பிரிவு போலீஸாா் புதன்கிழமை சோதனை நடத்தினா்.

தேனி மாவட்ட ஊரக வளா்ச்சி முகமை அலுவலகம் அருகேயுள்ள தேனி ஒருங்கிணைந்த பதிவுத் துறை அலுவலக வளாகத்தில் தேனி சாா் பதிவாளா் அலுவலகம் செயல்பட்டு வருகிறது.

இந்த அலுவலகத்தில் தேனி ஊழல் தடுப்பு கண்காணிப்புப் பிரிவு காவல் துணை கண்காணிப்பாளா் சுந்தர்ராஜ் தலைமையிலான போலீஸாா் பிற்பகல் 2.30 மணிக்கு சோதனையில் ஈடுபட்டனா். அலுவலகத்திலிருந்த பொதுமக்களை வெளியேற்றிவிட்டு, அலுவலகக் கதவை மூடிக் கொண்டு சோதனை நடைபெற்றது. இரவு 8.30 மணி வரை சோதனை நடைபெற்றது.

இதில், கணக்கில் வராத ரூ.43 ஆயிரத்து 900 பறிமுதல் செய்யப்பட்டது என்று போலீஸாா் தெரிவித்தனா்.