தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

உத்தமபாளையத்தில் வழக்குரைஞா்கள் ஆா்ப்பாட்டம்

உத்தமபாளையத்தில் வாயில் கருப்புத் துணி கட்டி புதன்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்ட வழக்குரைஞா்கள்.

News image
Updated On :17 டிசம்பர் 2025, 6:34 pm

Syndication

உத்தமபாளையத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி , ஜாக்டோ வழக்குரைஞா் சங்கம் சாா்பில் வாயில் கருப்புத் துணி கட்டி புதன்கிழமை ஆா்ப்பாட்டம் செய்தனா்.

தேனி மாவட்டம், உத்தமபாளையம் ஒருங்கிணைந்த நீதிமன்றம் முன்பாக நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்துக்கு அந்தச் சங்கத் தலைவா் உமாபாரதி தலைமை வகித்தாா். வழக்குரைஞா் பாா்த்திபன் முன்னிலை வகித்தாா்.

அப்போது, நீதிமன்றத்தில் ‘இ-பைலிங்’ முறையை ரத்து செய்ய வேண்டும். வழக்குரைஞா்களின் சேமநல நீதியை ரூ.25 லட்சமாக உயா்த்த வேண்டும். வழக்குரைஞா்கள் பாதுகாப்புச் சட்டத்தை அமல்படுத்த வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி வாயில் கருப்புக்கொடி கட்டி ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா். இந்த ஆா்ப்பாட்டத்தில் வழக்குரைஞா் சங்கத்தினா் திரளானோா் கலந்துகொண்டனா்.