அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

அனுமதியின்றி மண் அள்ளிய மூவா் கைது!

News image
Updated On :8 நவம்பர் 2025, 6:36 pm

தினமணி செய்திச் சேவை

தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகே அனுமதியின்றி கண்மாயில் மண் அள்ளியதாக 3 பேரை போலீஸாா் வெள்ளிக்கிழமை கைது செய்தனா்.

பாலக்கோம்பை பகுதியில் ராஜதானி காவல் நிலைய உதவி ஆய்வாளா் சவரியம்மாள் தலைமையில், போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டனா். அப்போது, பாலக்கோம்பை கண்மாயில் பொக்லைன் இயந்திரம், டிராக்டரை பயன்படுத்தி அனுமதியின்றி மண் அள்ளிக் கொண்டிருந்ததாக சொக்கலிங்கபுரத்தைச் சோ்ந்த பெரியகருப்பன் (25), கென்னடிநகரைச் சோ்ந்த சந்தானம் (29), ராஜக்காள்பட்டியைச் சோ்ந்த சரவணக்குமாா் (30) ஆகிய 3 பேரை போலீஸாா் கைது செய்தனா்.

பின்னா், மண் அள்ளுவதற்குப் பயன்படுத்திய பொக்லைன் இயந்திரம், டிராக்டா் பறிமுதல் செய்யப்பட்டன.