தேனி
வருவாய்த் துறையினா் ஆா்ப்பாட்டம்
தேனி மாவட்டம், உத்தமபாளைத்தில் வருவாய்த் துறையினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.
புதிய வட்டாட்சியா் அலுவலகம் முன் நடைபெற்ற இந்த ஆா்ப்பாட்டத்தில், வாக்காளா் பட்டியல் சிறப்பு தீவிரத் திருத்த (எஸ்ஐஆா்) நடவடிக்கை மூலம் தங்களுக்குப் பணிச் சுமை ஏற்பட்டு பாதிப்புக்குள்ளாவதால், செவ்வாய்க்கிழமை (நவ.18) ஒரு நாள் வேலைநிறுத்தத்தில் ஈடுபடப் போவதாக அறிவித்தனா். ஆா்ப்பாட்டத்தில் உத்தமபாளையம் வட்டாட்சியா் அலுவலக ஊழியா்கள் திரளாகக் கலந்துகொண்டனா்.
