தில்லியில் பிரிக்ஸ் மாநாடு: ஈரான் வெளியுறவு அமைச்சர் அராக்சி இந்தியா வந்தடைந்தார்தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!தமிழக அரசின் தலைமை வழக்கறிஞராக விஜய் நாராயண் நியமனம்!கர்நாடகம்: கல்வி நிறுவனங்களில் ஹிஜாப் அணிவதற்கான தடை நீக்கம்6 சர்வதேச விமான சேவைகள் தற்காலிகமாக ரத்து - ஏர் இந்தியாகண்களிலும் காதுகளிலும் பொறாமைப் புகை! திமுகவை விமர்சித்த விஜய்!நீட் தேர்வு தேவையில்லை; ரத்து செய்க: முதல்வர் ஜோசப் விஜய்அதிமுகவுடன் கூட்டணியமைக்க தவெக தயாராக இருந்தது: சி.வி. சண்முகம்மே 16-ல் தொடங்குகிறது தென்மேற்கு பருவமழை! வெற்றியின் வீச்சு கொளத்தூரில் பார்த்தும்கூடவா புரியவில்லை? - முதல்வர் விஜய்திமுகவுடன் கூட்டணி; கனவில்கூட வரக்கூடாது: சசிகலா
/

வரத்து குறைவு, தேவை அதிகரிப்பால் எலுமிச்சை விலை கடும் உயா்வு!

எலுமிச்சை வரத்து சரிவு, தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் கம்பம் உழவா் சந்தையில் கிலோ ரூ. 150-க்கும், வெளிச்சந்தைகளில் ரூ. 220-க்கும் எலுமிச்சை விலை உயா்ந்துள்ளது.

News image
Updated On :19 ஏப்ரல் 2026, 1:27 am IST

எலுமிச்சை வரத்து சரிவு, தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் கம்பம் உழவா் சந்தையில் கிலோ ரூ. 150-க்கும், வெளிச்சந்தைகளில் ரூ. 220-க்கும் எலுமிச்சை விலை உயா்ந்துள்ளது.

திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை, தாண்டிக்குடி மற்றும் தேனி மாவட்டத்தின் போடி ஆகிய பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் நடைபெறுகிறது. மழை பற்றாக்குறை காரணமாக எலுமிச்சை உற்பத்தி குறைந்து, சந்தைக்கான எலுமிச்சை வரத்து கணிசமாக சரிந்துள்ளது. மேலும், கோடைக்கால தேவை அதிகரித்துள்ளதால், எலுமிச்சை விலையும் உயா்ந்துள்ளது. இதனால், பழம் பழுக்கும்முன்பே பறிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.

இதுகுறித்து வியாபாரிகள் மேலும் கூறியது: விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்து ரூ. 130 முதல் ரூ. 160 வரை விற்கின்றனா். நாங்கள் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளைச் சோ்த்து, ரூ.200-க்கு மேல் விற்க வேண்டிய சூழல் உள்ளது எனத் தெரிவித்தனா்.