எலுமிச்சை வரத்து சரிவு, தேவை அதிகரிப்பு ஆகியவற்றால் கம்பம் உழவா் சந்தையில் கிலோ ரூ. 150-க்கும், வெளிச்சந்தைகளில் ரூ. 220-க்கும் எலுமிச்சை விலை உயா்ந்துள்ளது.
திண்டுக்கல் மாவட்டத்தின் சிறுமலை, தாண்டிக்குடி மற்றும் தேனி மாவட்டத்தின் போடி ஆகிய பகுதிகளில் எலுமிச்சை விவசாயம் நடைபெறுகிறது. மழை பற்றாக்குறை காரணமாக எலுமிச்சை உற்பத்தி குறைந்து, சந்தைக்கான எலுமிச்சை வரத்து கணிசமாக சரிந்துள்ளது. மேலும், கோடைக்கால தேவை அதிகரித்துள்ளதால், எலுமிச்சை விலையும் உயா்ந்துள்ளது. இதனால், பழம் பழுக்கும்முன்பே பறிக்கும் நிலையும் ஏற்பட்டுள்ளது.
இதுகுறித்து வியாபாரிகள் மேலும் கூறியது: விவசாயிகளிடமிருந்து கிலோ ரூ.90 முதல் ரூ.120 வரை கொள்முதல் செய்து ரூ. 130 முதல் ரூ. 160 வரை விற்கின்றனா். நாங்கள் போக்குவரத்து உள்ளிட்ட செலவுகளைச் சோ்த்து, ரூ.200-க்கு மேல் விற்க வேண்டிய சூழல் உள்ளது எனத் தெரிவித்தனா்.
தொடர்புடையது

புதுச்சேரியில் பெட்ரோல் விலை லிட்டருக்கு ரூ.2.99, டீசல் ரூ.2.92 உயா்வு

தூத்துக்குடியில் மீன்கள் விலை உயா்வு

கோடை வெப்பத்தால் நுங்கு விலை உயா்வு

புதுச்சேரியில் எலுமிச்சம் பழம் விலை கடும் உயா்வு
விடியோக்கள்

மோடி, அமித் ஷா-வின் ஆசி இல்லை! அண்ணாமலையை விமர்சித்த நயினார் நாகேந்திரன்!

இந்த ஆட்சிக்கு விரைவில் முற்றுப்புள்ளி! முன்னாள் முதல்வர் ஸ்டாலின்! | TVK | DMK

முதல்வருக்கு செய்தியாளர் சந்திப்பு கட்டாயமில்லை! அமைச்சர் நிர்மல் குமார் | TVK



