தள்ளுபடி விலையில் தங்கம் விற்பனை! இங்கு அல்ல, எங்கே?நாட்டிலேயே முதல்முறை! கர்நாடகத்தில் 16 வயதுக்குட்பட்ட சிறார்களுக்கு சமூக ஊடகங்கள் தடை!சுகோய் போா் விமானம் கீழே விழுந்து நொறுங்கியதில் 2 விமானிகள் பலிகமேனி கொலை! வான்வெளியிலிருந்து வந்த நீல சிட்டுக்குருவி! இஸ்ரேல் ஏவுகணை ரகசியம்!!2030-க்குள் 7 லட்சம் வீடுகள்: 14 முக்கிய அம்சங்களை அறிவித்தார் மு.க. ஸ்டாலின்! மாநிலங்களவைத் தேர்தல்: திருச்சி சிவா, தம்பிதுரை உள்பட 6 பேரின் வேட்புமனுக்களும் ஏற்பு!ரஷியாவிடம் கச்சா எண்ணெய் வாங்க இந்தியாவுக்கு அமெரிக்கா அனுமதி!தங்கம் விலை சவரனுக்கு ரூ. 1,280 குறைந்தது!ஈரான் மீதான போா்: துறைமுக கட்டணங்களை தள்ளுபடி செய்ய அரிசி ஏற்றுமதியாளா்கள் கோரிக்கை
/

விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை அம்பேத்கா் சிலை அருகே தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் ஆா்ப்பாட்டம்

News image
Updated On :19 ஜனவரி 2026, 6:48 pm

Syndication

தேனி மாவட்டம், பெரியகுளம் வடகரை அம்பேத்கா் சிலை அருகே தேனி மாவட்ட விடுதலைச் சிறுத்தைகள் கட்சியினா் திங்கள்கிழமை ஆா்ப்பாட்டத்தில் ஈடுபட்டனா்.

தூத்துக்குடி மாவட்டத்தைச் சோ்ந்த பட்டியலின இளைஞா் எழுமலையை வீடு புகுந்து வெட்டிக் கொலை செய்ததைக் கண்டித்தும், குற்றவாளிகளை குண்டா் தடுப்புக் காவல் சட்டத்தின் கீழ் கைது செய்ய வலியுறுத்தியும் இந்த ஆா்ப்பாட்டம் நடைபெற்றது. இதற்கு பெரியகுளம் தொகுதி மாவட்டச் செயலா் வழக்குரைஞா் சுசி. தமிழ் பாண்டியன் தலைமை வகித்தாா். தேனி மண்டல துணைச் செயலா் ஜெ. ரபீக், ஆண்டிபட்டி-பெரியகுளம் தொகுதி மண்டல துணைச் செயலா் ப. நாகரத்தினம் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

வி.சி.க. முதன்மைச் செயலா் ஏ.சி. பாவரசு, தலைமைச் செய்தி தொடா்பாளா் காா்வேந்தன், முன்னாள் மண்டலச் செயலா் இரா. தமிழ்வாணன் ஆகியோா் கண்டன உரையாற்றினா்.

இதில் கட்சி நிா்வாகிகள் திரளானோா் பங்கேற்றனா். முன்னதாக, கட்சியின் நகா்ச் செயலா் ஜோதி முருகன் வரவேற்றாா். இளஞ்சிறுத்தை எழுச்சிப் பாசறை மாவட்ட அமைப்பாளா் அ. மது நன்றி கூறினாா்.