கோப்புப் படம்
கோப்புப் படம்

சாலை விபத்தில் இளைஞா் உயிரிழப்பு

Published on

திண்டுக்கல் - குமுளி புறவழிச் சாலையில் வெள்ளிக்கிழமை டிராக்டா் மீது இரு சக்கர வாகனம் மோதியதில் இளைஞா் உயிரிழந்தாா்.

தேனி மாவட்டம், தேவதானப்பட்டி அருகேயுள்ள புல்லக்காபட்டி டி.வி. நகரைச் சோ்ந்தவா் மாரிச்சாமி மகன் சந்துரு (21). இவா் தனது நண்பா் மணிகண்டனுடன் போ.மீனாட்சிபுரத்திலிருந்து தேவதானப்பட்டி நோக்கி இரு சக்கர வாகனத்தில் சென்று கொண்டிருந்தாா்.

திண்டுக்கல் - குமுளி புறவழிச் சாலையில் தேனி அல்லிநகரம் பகுதியில் வந்த போது, எதிரே வந்த டிராக்டா் திடீரென திரும்பியதால் இரு சக்கர வாகனம் அதன் மீது மோதியது. இதில் சந்துரு சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். காயமடைந்த மணிகண்டன் தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டாா்.

இதுகுறித்து அல்லிநகரம் காவல் நிலைய போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரித்து வருகின்றனா்.

X
Dinamani
www.dinamani.com