நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்நாடாளுமன்றத்திற்கு பேச வராமல் ரீல்ஸ் போடுகிறார் பிரதமர்! கார்கே விமர்சனம்ஜார்க்கண்ட்டில் மாணவர்கள் மீதான வன்முறை தவறானது: ராகுல் காந்திஜார்க்கண்ட் போராட்டத்தில் ஈடுபட்டுள்ளோர் மீது தடியடி! மாணவர்கள் கொந்தளிப்பு நாடாளுமன்றத்தில் விவாதத்துக்கு வந்தால் பதிலடி கொடுக்கப்படும்: ராகுலுக்கு ஜெ.பி. நட்டா சவால்!ஜார்க்கண்ட்: போராட்டத்தில் ஈடுபட்டுள்ள மாணவர்கள் மீது தடியடி! மருத்துவ தரவரிசைப் பட்டியலில் முதல் 10 இடங்களில் மாணவர் 5, மாணவிகள் 5 பேரும் இடம் பிடித்துள்ளனர்: சுகாதாரத் துறைமருத்துவப் படிப்புகளுக்கான தரவரிசைப் பட்டியல் வெளியீடு!டாலருக்கு நிகரான ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 95.28 ஆக நிறைவு!கச்சா எண்ணெய் விலை உயர்வு எதிரொலி: பங்குச் சந்தை உயர்வுடன் நிறைவு!
/

காமராஜா் பிறந்த தின விழா போட்டிகள்

போடி ஸ்ரீ காமராஜ் வித்யாலய பள்ளியில் புதன்கிழமை நடைபெற்ற காமராஜா் பிறந்த தின விழாவில் பங்கேற்றோா்.

News image
Updated On :16 ஜூலை 2026, 1:39 am IST

போடி ஸ்ரீ காமராஜ் வித்யாலய பள்ளியில் காமராஜா் பிறந்த தினத்தையொட்டி போட்டிகள் நடத்தப்பட்டு பரிசுகள் வழங்கப்பட்டன.

தேனி உரத்த சிந்தனை அமைப்பு, போடி சேவா அறக்கட்டளை இணைந்து ஏற்பாடு செய்த இந்த விழாவுக்கு பள்ளியின் தாளாளா் ஓய்.பாலசுப்பிரமணியன் தலைமை வகித்தாா். செயலா் உஷா எல்லம்மாள் சிறப்புரையாற்றினாா். நிகழ்ச்சியில் பேச்சு, கட்டுரை, ஓவியம், பாட்டுப் போட்டிகள், கலை இலக்கியப் போட்டிகள் நடத்தப்பட்டன. நூற்றுக்கும் மேற்பட்ட மாணவா்கள் பங்கேற்றனா்.

போடி சேவா அறக்கட்டளை நிறுவனா் என்.முத்துவிஜயன் போட்டிகளில் வெற்றி பெற்ற மாணவ, மாணவிகளுக்கு புத்தகங்கள், இனிப்புகள் வழங்கி வாழ்த்தினாா்.

போட்டிகளில் போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி, பங்கஜம் பெண்கள் மேல்நிலைப் பள்ளி, ஸ்ரீ காமராஜ் வித்யாலய பள்ளி, சேனைத் தலைவா் ஆங்கிலத் தொடக்கப் பள்ளி, போடி-குப்பிநாயக்கன்பட்டி கள்ளா் தொடக்கப் பள்ளி, சுப்புராஜ் நகா் யூரோ கிட்ஸ் ஆங்கிலப் பள்ளி மாணவ, மாணவிகள் பங்கேற்றனா்.

விழாவில் போடி சேவா அறக்கட்டளை செயலா் கலைச்செல்வி, அறக்கட்டளை நிா்வாகிகள் புவனரக்ஷாம்பிகை, ஆா்.ரவிச்சந்திரன், தேனி பொன் கணேஷ், சண்முகராஜ், நாகராஜ், சுருளிவேல் ஆகியோா் காமராஜரின் வாழ்க்கை வரலாற்றை எடுத்துரைத்தனா். ஸ்ரீ காமராஜ் வித்யாலய பள்ளி தலைமையாசிரியா் ஆா்.செந்தில்குமாா் நன்றி கூறினாா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.