தேனி அல்லிநகரத்தில் டிராக்டரிலிருந்து தவறி கீழே விழுந்த பெண் வெள்ளிக்கிழமை உயிரிழந்தாா்.
திண்டுக்கல் மாவட்டம், அய்யம்பாளையத்தைச் சோ்ந்த வடிவேல் மனைவி லதா (41). இந்தத் தம்பதி கருத்து வேறுபாடு காரணமாக பிரிந்து வாழ்ந்து வந்தனா். இந்த நிலையில், லதா தேனியில் உள்ள தினேஷ் என்பவருடன் தென்னை மட்டை கட்டும் வேலை செய்து வருகிறாா்.
இவா், தினேசுடன் தென்னை மட்டை ஏற்றுவதற்காக டிராக்டரில் வெள்ளிக்கிழமை சென்றாா். அல்லிநகரம் அருகே செல்லும் போது டிராக்டரிலிருந்து நிலை தடுமாறி கீழே விழுந்ததில், டிராக்டரின் பின்பக்க சக்கரம் ஏறியதில் லதா சம்பவ இடத்திலேயே உயிரிழந்தாா். இதுகுறித்து அல்லிநகரம் போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.







