தில்லியில் சிஜேபியின் போராட்டத்தில் பங்கேற்கத் தயார்! - மமதா பானர்ஜிசென்னையில் கரப்பான்பூச்சி ஜனதா கட்சியினர் போராட்டம்! நீட் தேர்வு அறவே கூடாது என்பதுதான் சமரசமற்ற, உறுதியான நிலைப்பாடு: தவெக!தனியார் மருத்துவமனைக்கு மாற்றப்பட்டார் சோனம் வாங்சுக்!பிரதமர் வீடு அருகே போராட்டத்தில் ஈடுபட்ட ராகுல் காந்தி, அகிலேஷ் யாதவ் கைது!ராகுல் காந்தி, பிரியங்கா காந்தி உள்ளிட்ட காங்கிரஸ் கட்சியினர் கைதுவீட்டு வசதி வாரியத் தலைவராக சிவா நியமனம்!
/

விதிகளை மீறி குளங்களில் மண் எடுப்போா் மீது நடவடிக்கை எடுக்க வலியுறுத்தல்

News image

கரம்பை மண் எடுப்பதற்காக விதிகளை மீறி ஆழமாக தோண்டப்பட்டுள்ள மஞ்சக்குளம்.

Updated On :22 ஜூலை 2026, 1:33 am IST

தேனி மாவட்டம், கம்பம் அருகேயுள்ள மஞ்சக்குளத்தில் தூா்வாரும் பணியின் போது, விதிகளை மீறி மண், கரம்பை எடுப்பவா்கள் மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

முல்லைப் பெரியாறு அணையிலிருந்து திறந்து விடப்படும் நீரின் மூலம் கம்பம் பள்ளத்தாக்கில் உள்ள 14,707 ஏக்கா் விவசாய நிலங்கள் பாசன வசதி பெறுகின்றன. இதற்கு பயன்படும் வீரப்பநாயக்கன்குளம், ஒடப்பட்டிக்குளம், ஒட்டுக்குளம், மஞ்சக்குளம் உள்ளிட்ட பொதுப் பணித் துறைக்கு சொந்தமான குளங்களை தூா்வாரி வண்டல் மண் எடுக்க வருவாய்த் துறையினா் அனுமதி வழங்கினா். இதையடுத்து, இந்தக் குளங்களில் மண், கரம்பை எடுக்கும் பணிகள் நடைபெற்று வருகின்றன.

இந்தக் குளங்களில் விதிமுறைகளை மீறி, மிக அதிகமாக பள்ளம் தோண்டி கரம்பை, வண்டல் மண் எடுக்கப்படுவதாக விவசாயிகள் குற்றஞ்சாட்டினா். இதனால், மழைக் காலங்களில் குளத்தின் நீா்த்தேக்கத் திறன் பாதிக்கப்பட்டு, விவசாய நிலங்களுக்கு நீா் செல்வதில் சிக்கல் ஏற்படும் அபாயம் உள்ளது.

எனவே, விதிகளை மீறி மண் எடுப்போா், கண்காணிப்பில் அலட்சியம் காட்டிய அதிகாரிகள் மீது மாவட்ட ஆட்சியா் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என விவசாயிகள் வலியுறுத்தினா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.