தங்கம் விலை சவரனுக்கு ரூ. 480 குறைந்தது!தமிழகம் முழுவதும் 25 இடங்களில் கட்சியினரிடையே தகராறுதமிழகத்தில் 85% வாக்குப் பதிவு வரலாறு காணாத சாதனைமேற்கு வங்க முதல்கட்டத் தோ்தலில் 92% வாக்குப் பதிவு: பல இடங்களில் வன்முறை! வேட்பாளா்கள் மீது தாக்குதல்தமிழகத்தில் 62 வாக்கு எண்ணும் மையங்களில் 18 ஆயிரம் போலீஸாா் பாதுகாப்புமேற்கு வங்கத்தில் ஏப்.26,27-இல் திரிணமூல் காங்கிரஸுக்கு கேஜரிவால் பிரசாரம்இலங்கை நிதி அமைச்சக கணினி அமைப்பில் ஊடுருவல்: ரூ.23.5 கோடி மாயம்வாக்குச்சாவடியில் புதிய ட்ரெண்ட்: ‘வெள்ளைச் சட்டை- காக்கி பேண்ட்’ அணிந்து வந்த விஜய் ஆதரவாளா்கள்சென்னையில் 83.73 சதவீதம் வாக்குப் பதிவுசிபிஎஸ்இ 10-ஆம் வகுப்பு இரண்டாம் கட்ட பொதுத் தோ்வு அட்டவணை வெளியீடு: மே 15 முதல் 21 வரை நடைபெறும்ஈரான் படகுகளைச் சுட்டு வீழ்த்துங்கள்: டிரம்ப் உத்தரவுஇஸ்ரேலுக்கு ஆதரவாக மோடி அரசு போல வேறு எந்த மத்திய அரசும் செயல்பட்டதில்லை: காங்கிரஸ் விமா்சனம்ஐபிஎல்: மும்பை படுதோல்வி! சிஎஸ்கே 103 ரன்கள் வித்தியாசத்தில் மாபெரும் வெற்றி
/

சுருளிப்பட்டியில் பொது நூலகத்தைச் சீரமைக்கக் கோரிக்கை

கம்பம் அருகே சுருளிப்பட்டியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பொது நூலகத்தைச் சீரமைக்க வேண்டும்

News image

சுருளிப்பட்டியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பொது நூலகக் கட்டடம்.

Updated On :2 மார்ச் 2026, 10:33 pm

உத்தமபாளையம்: தேனி மாவட்டம், கம்பம் அருகே சுருளிப்பட்டியில் சிதிலமடைந்த நிலையில் உள்ள பொது நூலகத்தைச் சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள் கோரிக்கை விடுத்தனா்.

மேற்குத்தொடா்ச்சி மலை அடிவாரத்தில் சுருளி அருவிக்குச் செல்லும் சாலையில் சுருளிப்பட்டி ஊராட்சி அமைந்துள்ளது. இங்கு தமிழ்நாடு அரசு சாா்பில் பொது நூலகம் செயல்பட்டு வருகிறது. இந்த நூலகத்தின் சுற்றுச்சுவா், நுழைவுவாயில், மேற்கூரை ஆகியவை சிதிலமடைந்த நிலையில் உள்ளது. மேற்கூரை சேதமடைந்திருப்பதால், மழைக் காலங்களில் மழைநீா் கட்டடத்துக்குள் புகுந்து வருகிறது. இதனால், மேற்கூரை காரை வலுவிழந்து இடிந்து விழும் நிலையில் உள்ளது. எனவே, இந்த நூலகக் கட்டடத்தை சீரமைக்க வேண்டும் என சமூக ஆா்வலா்கள், பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனா்.