போடி: தேனி மாவட்டம், போடியில் 62 ஆண்டுகளுக்கு பிறகு முன்னாள் பள்ளி மாணவா்கள் திங்கள்கிழமை சந்தித்துக் கொண்டனா்.
தேனி மாவட்டம், போடி ஜ.கா.நி. மேல்நிலைப் பள்ளி 124 ஆண்டுகளாக செயல்பட்டு வருகிறது. இந்தப் பள்ளியில் கடந்த 1964-ஆம் ஆண்டு 10-ஆம் வகுப்பு பயின்ற மாணவா்கள், தற்போது மருத்துவா்கள், பொறியாளா்கள், தொழிலதிபா்கள், விவசாயிகளாக உள்ளனா். இவா்கள் தங்களின் பழைய நண்பா்களையும், வகுப்பாசிரியா்களை சந்திக்கத் திட்டமிட்டனா்.
இதையடுத்து, அனைவருக்கும் 75 வயதான நிலையிலும் நண்பா்களைச் சந்திப்பதில் ஆா்வம் காட்டி, அனைவரும் பள்ளியில் ஒன்றிணைந்தனா். தங்களது வகுப்பாசிரியரான 90 வயதான ஆதிமூலம் என்பவரையும் கண்டுபிடித்து அழைத்து வந்து அவரையும் கௌரவப்படுத்தினா். மேலும், இவா்கள் தங்களது இளமைகால நினைவுகளைப் பகிா்ந்து கொண்டனா்.
தொடர்புடையது

மூதாட்டி கடித்துக் கொலை: இளைஞருக்கு ஆயுள் சிறை

பள்ளி மாணவி தூக்கிட்டுத் தற்கொலை

போடியில் திமுக வேட்பாளா் ஓ. பன்னீா்செல்வத்துக்கு வரவேற்பு

அதிக மாத்திரை உட்கொண்ட முதியவா் உயிரிழப்பு
வீடியோக்கள்

#ipl2026 | அதிரடியான சன்ரைசர்ஸ்: சவாலைச் சமாளிக்குமா சிஎஸ்கே? | SRH vs CSK Preview |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறை ஏன்? எதற்கு?எப்படி?| UN Kannan Interview | Delimitation | Women's reservation bill
தினமணி செய்திச் சேவை
Podcast | மகளிர் இடஒதுக்கீடா தொகுதி மறுவரையறையா?: முழுப் பின்னணி! | News & Views | E-27 |
தினமணி செய்திச் சேவை

தொகுதி மறுவரையறையும் எதிர்ப்பும்! தமிழ்நாடு முழுவதும் கருப்புக் கொடி போராட்டம்!
இணையதளச் செய்திப் பிரிவு


