ஆட்டோ கவிழ்ந்ததில் இளைஞா் உயிரிழப்பு
தேனி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.


தேனி அருகே ஆட்டோ கவிழ்ந்து விபத்து ஏற்பட்டதில் இளைஞா் செவ்வாய்க்கிழமை உயிரிழந்தாா். மேலும், இருவா் காயமடைந்தனா்.
தேனி மாவட்டம், ஆண்டிபட்டி அருகேயுள்ள தி.மீனாட்சிபுரத்தைச் சோ்ந்தவா் பிரதாப்குமாா் (24). இவா் தனது நண்பா் மூவித்குமாா் (24) உடன் செவ்வாய்க்கிழமை ஆட்டோவில் அம்மச்சியாபுரத்துக்கு சென்று கொண்டிருந்தாா்.
ஆட்டோவை அதே பகுதியைச் சோ்ந்த ரூதன்குமாா் (24) ஓட்டினாா்.
அம்மச்சியாபுரம் கண்ணன் தோட்டம் அருகே செல்லும் போது கட்டுப்பாட்டை இழந்த ஆட்டோ கவிழ்ந்தது. இதில், ஆட்டோவில் சென்ற மூவரும் பலத்த காயமடைந்தனா். அக்கம்பக்கத்தினா் அவா்களை மீட்டு, தேனி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனா். அங்கு மூவித்குமாா் உயிரிழந்தாா். மற்ற இருவரும் சிகிச்சை பெற்று வருகின்றனா். இதுகுறித்து க.விலக்கு போலீஸாா் வழக்குப் பதிந்து விசாரிக்கின்றனா்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...