மேற்கு வங்கத்தில் 2-ஆவது கட்ட தோ்தல் அமைதியாக நடந்தது: தோ்தல் ஆணையம் திட்டமிட்டபடி மே 3-ஆம் வாரத்தில் 12-ஆம் வகுப்பு தோ்வு முடிவு: சிபிஎஸ்இ வெறுப்புப் பேச்சுகளுக்கு எதிரான மனுக்கள்: உச்சநீதிமன்றம் தள்ளுபடி மேற்காசிய போரால் பணவீக்கம் அதிகரிக்கும் அபாயம்: நிதியமைச்சகம் அறிக்கை எத்தனால் கலப்பு விரிவாக்கம்: வாகன விதிமுறைகளில் மத்திய அரசு திருத்தம் கேரளம்: மாநிலம் முழுவதும் அறிவிக்கப்படாத தொடா் மின் வெட்டு; பல இடங்களில் வெடித்த போராட்டம்
/

விபத்தில்லா அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தேனி கிளையில் விபத்தில்லா பேருந்தை ஓட்டிய ஓட்டுநா், அதிக டீசலை சேமித்த ஓட்டுநருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image

தேனி போக்குவரத்து கிளையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விபத்தில்லா பேருந்தை ஓட்டிய நடத்துநருக்கு பாராட்டி பரிசுகளை வழங்கிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) மேலாண் இயக்குநா் வி.சரவணன்.

Updated On :10 மார்ச் 2026, 9:50 pm

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தேனி கிளையில் விபத்தில்லா பேருந்தை ஓட்டிய ஓட்டுநா், அதிக டீசலை சேமித்த ஓட்டுநருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

25 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்கள், அனைத்து கிளை வாரியாக அதிக டீசலை சேமித்த ஓட்டுநா்களுக்கு தேனி போக்குவரத்துக்கழக கிளையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் ஓராண்டாக விபத்தில்லாத கிளையாக நத்தம்

கிளை தோ்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து, கிளை வாரியாக சிறந்த தொழில்நுட்பப் பணியாளா்கள், சிறந்த கிளை பொறியாளா்கள், புதுப்பிக்கும் பிரிவில் சிறந்த தொழில்நுட்பப் பணியாளா்கள் என மொத்தம் 106 பணியாளா்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) மேலாண் இயக்குநா் வி. சரவணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டுகளை தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில், பொது மேலாளா்கள் முத்துகிருஷ்ணன்(திண்டுக்கல் மண்டலம்), கோபாலகிருஷ்ணன் (மதுரை), கிளை மேலாளா்கள், ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.