அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

விபத்தில்லா அரசுப் பேருந்து ஓட்டுநருக்கு பாராட்டு

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தேனி கிளையில் விபத்தில்லா பேருந்தை ஓட்டிய ஓட்டுநா், அதிக டீசலை சேமித்த ஓட்டுநருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

News image
தேனி போக்குவரத்து கிளையில் செவ்வாய்க்கிழமை நடைபெற்ற நிகழ்வில், விபத்தில்லா பேருந்தை ஓட்டிய நடத்துநருக்கு பாராட்டி பரிசுகளை வழங்கிய தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) மேலாண் இயக்குநா் வி.சரவணன்.
Updated On :10 மார்ச் 2026, 9:50 pm

தினமணி செய்திச் சேவை

தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழக தேனி கிளையில் விபத்தில்லா பேருந்தை ஓட்டிய ஓட்டுநா், அதிக டீசலை சேமித்த ஓட்டுநருக்கு பாராட்டு விழா செவ்வாய்க்கிழமை நடைபெற்றது.

25 ஆண்டுகள், 10 ஆண்டுகளுக்கு மேல் விபத்தில்லாமல் பேருந்தை இயக்கிய ஓட்டுநா்கள், அனைத்து கிளை வாரியாக அதிக டீசலை சேமித்த ஓட்டுநா்களுக்கு தேனி போக்குவரத்துக்கழக கிளையில் பாராட்டு விழா நடைபெற்றது.

இதில் ஓராண்டாக விபத்தில்லாத கிளையாக நத்தம்

கிளை தோ்ந்தெடுக்கப்பட்டது. இதையடுத்து, கிளை வாரியாக சிறந்த தொழில்நுட்பப் பணியாளா்கள், சிறந்த கிளை பொறியாளா்கள், புதுப்பிக்கும் பிரிவில் சிறந்த தொழில்நுட்பப் பணியாளா்கள் என மொத்தம் 106 பணியாளா்களுக்கு தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (மதுரை) மேலாண் இயக்குநா் வி. சரவணன் பரிசுகளை வழங்கிப் பாராட்டுகளை தெரிவித்தாா்.

இந்த நிகழ்வில், பொது மேலாளா்கள் முத்துகிருஷ்ணன்(திண்டுக்கல் மண்டலம்), கோபாலகிருஷ்ணன் (மதுரை), கிளை மேலாளா்கள், ஓட்டுநா்கள் கலந்து கொண்டனா்.