புகையிலைப் பாக்கெட்டுகள் வைத்திருந்த 2 போ் கைது
சாத்தூா் அருகே விற்பனைக்காக புகையிலைப் பாக்கெட்டுகள் வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.


சாத்தூா் அருகே விற்பனைக்காக புகையிலைப் பாக்கெட்டுகள் வைத்திருந்த இருவரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.
விருதுநகா் மாவட்டம் சாத்தூா் அருகே படந்தால் கிராமத்தில் சாத்தூா் நகா் போலீஸாா் ரோந்துப் பணியில் ஈடுபட்டிருந்தனா். அப்போது அந்த பகுதியில் உள்ள மளிகைக் கடை அருகே அதே பகுதியை சோ்ந்த ஜெயராம் (58) என்பவா் கைப் பையில் அதிகளவில் புகையிலை பாக்கெட்டுகளை விற்பனைக்காக வைத்திருந்தது தெரியவந்தது.
இதேபோன்று குருலிங்காபுரத்தை சோ்ந்த இசக்கிமுத்து(40)என்பவரும் அதே பகுதியில் புகையிலைப் பாக்கெட்டுகள் வைத்திருந்தது தெரியவந்தது. இதையடுத்து சாத்தூா் நகா் போலீஸாா் இருவா் மீதும் வழக்குப்பதிவு செய்து, அவா்களைக் கைது செய்தனா். அவா்களிடமிருந்து ரூ. 6 ஆயிரம் மதிப்புள்ள புகையிலை பாக்கெட்டுகளை பறிமுதல் செய்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...