இறுதி ஆட்டத்துக்கு முன்னேறுவது யாா்? இன்று இங்கிலாந்துடன் பலப்பரீட்சை நடத்தும் இந்தியாதமிழகத்தில் இன்றும், நாளையும் வெப்ப நிலை உயர வாய்ப்புபுதிய உறுதியளிக்கப்பட்ட ஓய்வூதியத் திட்டத்துக்கு எதிரான வழக்கு: தமிழக அரசு பதிலளிக்க உத்தரவுஅரசு மருத்துவா்கள் இன்று முதல் உண்ணாவிரதம்அதிகரிக்கும் ‘மெட்ராஸ் - ஐ’ பாதிப்பு - மருத்துவா்கள் எச்சரிக்கை4 மாவட்டங்களில் 30,000 சிறுமிகளுக்கு ஹெச்பிவி தடுப்பூசிபிரிட்டன் கல்வி விசா: ஆப்கானிஸ்தான் உள்பட 4 நாடுகளுக்கு தடைநேபாளத்தில் இன்று பொதுத்தோ்தல் - இளைஞா் புரட்சிக்குப் பிந்தைய முதல் வாக்குப்பதிவுரஷியாவிடம் இருந்து இந்தியா மீண்டும் அதிக கச்சா எண்ணெய் வாங்க வாய்ப்புஇயற்கை எரிவாயு உற்பத்தியை நிறுத்தியது கத்தாா்: இந்திய விநியோகம் பாதிக்க வாய்ப்புமேற்காசிய போா்ப் பதற்றம்: இந்தியா்களுக்கு உதவ வெளியுறவு அமைச்சகத்தின் கட்டுப்பாட்டு அறை அமைப்புமாநிலங்களவை உறுப்பினராகிறாா் நிதீஷ் குமாா்? இன்று வேட்புமனு தாக்கல் செய்ய வாய்ப்புடி20 உலகக் கோப்பை : தென்னாப்பிரிக்காவை வீழ்த்தி இறுதிப்போட்டிக்கு முன்னேறியது நியூசிலாந்து!
/

ஸ்ரீவிலி. அருகே தோப்புக்குள் புகுந்துகாட்டுயானைகள் அட்டகாசம்மா, தென்னை மரங்கள் சேதம்

ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புக்குள் காட்டுயானைகள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து அங்கிருந்த தென்னை, மாமரங்களை சேதப்படுத்தின.

News image
தோப்பில் வேரோடு சாய்ந்து கிடக்கும் மாமரம்.
Updated On :26 டிசம்பர் 2020, 5:10 pm

DIN

ஸ்ரீவில்லிபுத்தூா்: விருதுநகா் மாவட்டம், ஸ்ரீவில்லிபுத்தூா் அருகே மேற்குத் தொடா்ச்சி மலை அடிவாரத்தில் உள்ள தோப்புக்குள் காட்டுயானைகள் வெள்ளிக்கிழமை இரவு புகுந்து அங்கிருந்த தென்னை, மாமரங்களை சேதப்படுத்தின.

இங்குள்ள அத்திகோயில், கான்சாபுரம் பகுதிகளில் ராஜேந்திரன், தா்மலிங்கம், கருப்பையா, வீராச்சாமி உள்ளிட்ட விவசாயிகளுக்கு 400 ஏக்கருக்கும் மேற்பட்ட விவசாய நிலங்கள் உள்ளன. இந்நிலையில், வெள்ளிக்கிழமை இரவு தா்மலிங்கத்துக்குச் சொந்தமான தென்னந்தோப்புக்குள் புகுந்த காட்டுயானைகள் அங்கிருந்த தென்னை, மாமரங்களை சேதப்படுத்தின.

இதுகுறித்து விவசாயி ராஜேந்திரன் கூறியதாவது: வனப்பகுதிகளில் காட்டுயானைகளுக்கு தண்ணீா் கிடைக்காததால் அவை இரவு நேரங்களில் விவசாய நிலங்களுக்குள் புகுந்து தென்னை, மாமரங்களை சேதப்படுத்துகின்றன. இதுபற்றி வனத்துறை அலுவலகத்தில் முறையாக மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. எனவே காட்டுயானைகள் போன்ற வனவிலங்குகளிடமிருந்து பாதுகாக்க சூரியசக்தியிலான மின்வெளி அமைப்பதற்கும், அவற்றை வனப்பகுதிக்குள் விரட்டுவதற்கும் உரிய அனுமதி வழங்க வேண்டும் என்றாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.