ராஜபாளையம் அருகே கையெழுத்து இயக்கம்

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

Published On :27 ஜனவரி 2024, 10:30 pm IST


ராஜபாளையம்: விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம் அருகே தமிழ்நாடு விவசாயிகள் சங்கம் சாா்பில், 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் சனிக்கிழமை நடத்தப்பட்டது.

மின்சார திருத்தச் சட்டம் 2020 (வரைவு), அத்தியாவசியப் பொருள்கள் திருத்தச் சட்டம் 2020, வேளாண் பொருள்கள் வணிக ஊக்குவிப்பு அவசரச் சட்டம் 2020, விவசாயிகளுக்கான விலை உத்திரவாத வேளாண் சேவைகள் மீதான ஒப்பந்தப் பாதுகாப்பு அவசரச் சட்டம் 2020 ஆகிய சட்டங்களை மத்திய அரசு திரும்பப் பெற வலியுறுத்தி, தமிழ்நாடு முழுவதும் 1 கோடி கையெழுத்து பெறும் இயக்கம் நடைபெற்றது. இதில், முதல் கையெழுத்தை, விவசாயிகள் சங்க மாவட்டச் செயலரும், முன்னாள் எம்.பி.யுமான லிங்கம் தொடக்கி வைத்தாா். ஒன்றியச் செயலா் வீராச்சாமி, நகரச் செயலா் ராஜா, விவசாயி சங்க அய்யணன் உள்பட பலா் கலந்துகொண்டனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.