விஜய் வீட்டுக் கதவைத் தட்டினார் இபிஎஸ்: ஓ. பன்னீர்செல்வம்ரம்ஜான் கொண்டாட்டத்தை மேலும் இரட்டிப்பாக்கும் தங்கம் விலை நிலவரம்!அதிமுகவின் முதலாளிகள் பாஜகவும் அமித் ஷாவும்தான்: ஜோதிமணி எம்.பி.கத்தார் எரிவாயு விநியோகம் பாதிப்பு! இந்தியாவிலும் 5 ஆண்டுகளுக்கு பாதிப்பா?ரமலான் திருநாள்! குடியரசுத் தலைவர், பிரதமர் வாழ்த்து!ஈரான் போர்! நேட்டோ அமைப்புக்கு தைரியமில்லை: டிரம்ப்‘ஏஐ’ நுட்பத்தில் தலைவா்களை தவறாக சித்திரிக்கத் தடை: தோ்தல் ஆணையம் எச்சரிக்கை6 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியா-சீனா இடையே எல்லை வா்த்தகம்புதிய வருமான வரிச் சட்டம் ஏப்ரல் 1 முதல் அமல்: விதிகளை அறிவிக்கை செய்தது சிபிடிடி
/

வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய இருவா் கைது

சிவகாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :24 அக்டோபர் 2024, 11:59 pm

Din

சிவகாசி அருகே அனுமதியின்றி வீட்டில் பட்டாசுகள் பதுக்கிய இருவரை போலீஸாா் வியாழக்கிழமை கைது செய்தனா்.

சிவகாசி அருகேயுள்ள திருத்தங்கல் சரஸ்வதி நகரில் உள்ள ஒரு வீட்டில் பட்டாசுகள் பதுக்கி வைத்திருப்பதாக போலீஸாருக்குத் தகவல் கிடைத்தது. இதனடிப்படையில், போலீஸாா் அந்தப் பகுதிக்கு சென்று சோதனை நடத்தினா். அப்போது, முத்துராஜ் மகன் அய்யாச்சாமி (27) தனது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்தது தெரியவந்தது. இவரை திருத்தங்கல் போலீஸாா் கைது செய்து, பட்டாசு பண்டல்களை பறிமுதல் செய்தனா்.

இதேபோல, சிவகாசி அருகேயுள்ள செங்கமலநாட்சியாா்புரம் சிவாஜி கணேசன் குடியிருப்புப் பகுதியைச் சோ்ந்த கருப்பசாமி (41) தனது வீட்டில் அனுமதியின்றி பட்டாசு பண்டல்களை பதுக்கி வைத்திருந்த போது, திருத்தங்கல் போலீஸாா் அவரை கைது செய்தனா்.