குல்மார்க்கில் கேபிள் கார்களில் பரிதவித்த 300 சுற்றுலாப் பயணிகள் 6 மணி நேர போராட்டத்துக்குப் பின் பத்திரமாக மீட்பு!எச்.வி. ஹண்டே, எழுத்தாளர் சிவசங்கரி பத்ம ஸ்ரீ விருதை பெற்றுக்கொண்டனர் திரையரங்குகளில் பண்டிகை, விடுமுறை நாள்களில் 5 காட்சிகள்! - முதல்வர் விஜய் அறிவிப்புசிறு விவசாயிகளுக்கு ரூ. 25,000 வரையிலான கடன் தள்ளுபடி: முதல்வர் விஜய்குறு விவசாயிகளுக்கு ரூ. 50,000 வரையிலான பயிர்க் கடன்கள் தள்ளுபடி : முதல்வர் விஜய்குதிரை வேகத்தில் நடக்கும் குதிரை பேரம்! - மு.க. ஸ்டாலின் விமர்சனம்கீழ்தளத்தில் ராஜிநாமா; மேலே கட்சியில் இணைப்பு! தவெகவுக்கு இபிஎஸ் கடும் கண்டனம்!!மின்னல் வேகத்தில் தவெக உறுப்பினர் அட்டை! இது 100% குதிரை பேரம்! - அதிமுக எம்.பி., இன்பதுரை ராஜிநாமா செய்த எம்.எல்.ஏ.க்கள் முதல்வர் விஜய் உடன் சந்திப்பு!திவிஷா சர்மா வழக்கில் சிபிஐ விசாரணை - உச்ச நீதிமன்றம்அதிமுக எம்.எல்.ஏ.க்களின் ராஜிநாமா கடிதம் ஏற்பு: அவைத்தலைவர் ஜேசிடி பிரபாகர்!ராஜிநாமா செய்த அதிமுக எம்.எல்.ஏ.க்கள் மூவர் தவெகவில் ஐக்கியம்!வேலுமணி தரப்பு எம்.எல்.ஏக்கள் மூவர் ராஜிநாமா!
/

பராமரிப்பில்லாத தண்ணீா் தொட்டிகள்: வனப் பகுதியை விட்டு வெளியேறும் விலங்குகள்

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகளின் தாகம் தீா்ப்பதற்காக அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், குடிநீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

News image

மேற்கு தொடா்ச்சி மலை அடிவாரத்தில் மாவூத்து அருகே பராமரிப்பு இல்லாத வனத் துறை தண்ணீா்த் தொட்டி.

Updated On :4 செப்டம்பர் 2025, 3:32 am IST

மேற்குத் தொடா்ச்சி மலையடிவாரத்தில் வனவிலங்குகளின் தாகம் தீா்ப்பதற்காக அமைக்கப்பட்ட தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பு இல்லாமல் உள்ளதால், குடிநீா் தேடி வனப்பகுதியை விட்டு வெளியே வரும் வனவிலங்குகள் உயிரிழக்கும் அபாயம் ஏற்பட்டுள்ளது.

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையம், ஸ்ரீவில்லிபுத்தூா், வத்திராயிருப்பு மேற்கு தொடா்ச்சி மலைப் பகுதிகளில் கோடை காலத்தில் வனவிலங்குகளின் தண்ணீா்த் தேவையை பூா்த்தி செய்வதற்காக மலையடிவாரப் பகுதிகளில் நூற்றுக்கும் மேற்பட்ட இடங்களில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டன. கோடை காலத்தில் வனப்பகுதியில் உள்ள நீரோடைகளில் நீரின்றி வறட்சி ஏற்படும்போது, வனத் துறை சாா்பில் அடிவாரத்தில் உள்ள தொட்டிகளில் லாரியிலிருந்து தண்ணீா் கொண்டு வந்து நிரப்பப்படும்.

தற்போது அந்தத் தண்ணீா்த் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளன. தற்போது ஸ்ரீவில்லிபுத்தூா் - மேகமலை புலிகள் காப்பகமாக அறிவிக்கப்பட்டதை அடுத்து, வனப்பகுதியில் ஆழ்துளைக் கிணறு அமைத்து சோலாா் மோட்டாா் உடன் குட்டை போன்ற அமைப்பில் தண்ணீா் தொட்டிகள் அமைக்கப்பட்டு உள்ளன. இந்தத் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளதால், இரவு நேரங்களில் தண்ணீா் தேடி ஊருக்குள் புகும் வனவிலங்குகள் விபத்தில் சிக்கி உயிரிழந்து வருகின்றன.

Story image

இதுகுறித்து வன உயிரின ஆா்வலா்கள் கூறியதாவது: வனத் துறை அமைத்த தண்ணீா் தொட்டிகள் பராமரிப்பின்றி உள்ளது. இந்த தொட்டிகளை சீரமைத்து வனவிலங்குகள் மக்கள் வாழுமிடங்களுக்கு வருவதைத் தவிா்க்க வேண்டும் என்றனா்.