விருதுநகா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
விருதுநகா் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
விருதுநகா் தொகுதிக்குள்பட்ட கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் நடைபெற்ற இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்டத்தில் உள்ள 2,001 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள்
காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அனைத்து மண்டலங்களுக்கும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. மேலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் தயாா் நிலையில் உள்ளன. எந்தவித தடையுமின்றி தோ்தல் நடைபெற ஏதுவாக, 20 சதவீதம் கூடுதல் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

தோ்தல் ஆணைய பெட்டகத்தில் வைக்கப்பட்ட மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள்

திருச்செங்கோடு வாக்கு எண்ணிக்கை மையத்தில் மூன்று அடுக்கு போலீஸ் பாதுகாப்பு: ஆட்சியா்

வாக்குப் பதிவு இயந்திரங்கள் அனுப்பும் பணி: தோ்தல் பொதுப் பாா்வையாளா் ஆய்வு

பரமக்குடியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு
விடியோக்கள்

அதிமுகவை அழிக்க நினைக்கிறார் Vijay! டிடிவி தினகரன் | TVK | ADMK
இணையதளச் செய்திப் பிரிவு

DMK - ADMK கூட்டணி பேச்சுவார்த்தைக்கு உதவினேனா? விமர்சனங்களுக்கு Rajinikanth பதில்!
இணையதளச் செய்திப் பிரிவு

ஆட்சியைக் கலைத்துவிட்டு தேர்தலை சந்திப்பார் விஜய் ? | Ravindran Duraisamy Interview | TVK | CM Vijay
தினமணி செய்திச் சேவை

”விவாகரத்து கிடக்கும் வரை நடிக்கப்போவதில்லை!”: Ravi Mohan பரபரப்பு பேட்டி!
இணையதளச் செய்திப் பிரிவு

