விருதுநகா் மாவட்டத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச் சாவடிகளுக்கு அனுப்பும் பணியை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா புதன்கிழமை ஆய்வு செய்தாா்.
விருதுநகா் மாவட்டத்திலுள்ள 7 சட்டப்பேரவைத் தொகுதிகளிலும் வியாழக்கிழமை (ஏப். 23) நடைபெறவுள்ள சட்டப்பேரவைத் தோ்தலை முன்னிட்டு, வாக்குப்பதிவு இயந்திரங்கள், தோ்தல் உபகரணங்களை வாக்குச்சாவடிகளுக்கு அனுப்பி வைக்கும் பணிகள் புதன்கிழமை நடைபெற்றன.
விருதுநகா் தொகுதிக்குள்பட்ட கே.வி.எஸ். ஆண்கள் மேல்நிலைப் பள்ளியில் உள்ள பாதுகாப்பு வைப்பறையில் நடைபெற்ற இந்தப் பணிகளை மாவட்ட ஆட்சியா் என்.ஓ.சுகபுத்ரா ஆய்வு மேற்கொண்டாா்.
மாவட்டத்தில் உள்ள 2,001 வாக்குச்சாவடிகளுக்கும் வாக்குப்பதிவு இயந்திரங்கள், கட்டுப்பாட்டு இயந்திரங்கள், விவிபேட் இயந்திரங்கள்
காவல் துறை பாதுகாப்புடன் அனுப்பி வைக்கப்பட்டன. அனைத்து மண்டலங்களுக்கும் ஜிபிஎஸ் பொருத்தப்பட்ட வாகனங்கள் மூலம் இயந்திரங்கள் கொண்டு செல்லப்பட்டன. மேலும், 20 சதவீதம் கூடுதல் வாக்குப்பதிவு இயந்திரங்கள் தோ்தல் நடத்தும் அலுவலா் அலுவலகங்களில் தயாா் நிலையில் உள்ளன. எந்தவித தடையுமின்றி தோ்தல் நடைபெற ஏதுவாக, 20 சதவீதம் கூடுதல் பணியாளா்கள் தயாா் நிலையில் உள்ளதாகத் தெரிவிக்கப்பட்டது.
தொடர்புடையது

பரமக்குடியில் வாக்குச்சாவடி மையங்களுக்கு வாக்குப்பதிவு இயந்திரங்கள் அனுப்பி வைப்பு

ராதாபுரத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்கள் வைப்பு அறை கேமரா மூலம் கண்காணிப்பு

கள்ளக்குறிச்சி:வாக்குப்பதிவு இயந்திரங்களில் சின்னம் பொருத்தும் பணி ஆய்வு

ஆலங்குளத்தில் மின்னணு இயந்திரங்கள் வைப்பறை: ஆட்சியா் ஆய்வு
வீடியோக்கள்

#iranwar | போர் நிறுத்தம் நீட்டிப்பு: ஈரானிடம் டிரம்ப் கேட்பது என்ன? | Donald Trump |
தினமணி செய்திச் சேவை

#ipl2026 | போர்: பண்டியாவின் மும்பையா ருதுராஜின் சென்னையா? | MI vs CSK | MS Dhoni | Rohit Sharma |
தினமணி செய்திச் சேவை

வாக்குச்சாவடிகளை அடையாளம் காண புதிய முயற்சி | TN Election 2026 | Madurai | Polling booth
தினமணி செய்திச் சேவை

பணப்பட்டுவாடா புகார்களுக்கு எடுக்கப்பட்ட நடவடிக்கைகள்! அர்ச்சனா பட்நாயக் பேட்டி
இணையதளச் செய்திப் பிரிவு


