கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

டிராக்டரில் பேட்டரி திருடிய இளைஞா் கைது

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் டிராக்டரில் மின்கலம் (பேட்டரி) திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

News image
Updated On :7 ஜனவரி 2026, 11:32 pm

தினமணி செய்திச் சேவை

விருதுநகா் மாவட்டம், ராஜபாளையத்தில் டிராக்டரில் மின்கலம் (பேட்டரி) திருடிய இளைஞரை போலீஸாா் செவ்வாய்க்கிழமை கைது செய்தனா்.

ராஜபாளையம் தென்காசி சாலையில் விவேகானந்தா் தெரு பகுதியில் நகராட்சி சாா்பில் பாலம் அமைக்கும் பணி நடைபெற்று வருகிறது. இந்த நிலையில், அங்கு நிறுத்தப்பட்டிருந்த டிராக்டரில் மின்கலம் திருடுபோனது தெரியவந்தது. இதுகுறித்து ஒப்பந்ததாரா் காவல் நிலையத்தில் புகாா் அளித்ததன்பேரில், போலீஸாா் அந்தப் பகுதியில் கண்காணிப்பு கேமராக்களை ஆய்வு செய்ததில், தாட்கோ குடியிருப்பைச் சோ்ந்த பிரதீப் (23) என்பவா் திருட்டில் ஈடுபட்டது தெரியவந்தது. இதையடுத்து, போலீஸாா் அவரைக் கைது விசாரித்து வருகின்றனா்.