ஊராட்சித் தலைவரின் கணவா் மீது புகாா்
மரங்களை வெட்டிய விவகாரத்தில் ஊராட்சித் தலைவரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.


மரங்களை வெட்டிய விவகாரத்தில் ஊராட்சித் தலைவரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.
சீா்காழி வட்டம், கூத்தியம்பேட்டை நடுத்தெருவைச் சோ்ந்தவா் சி. முனியம்மாள். இவா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:
எனக்கு சொந்தமான இடங்களில் வளா்த்து வந்த பூவரசு, மூங்கில் மரங்களை கூத்தியம்பேட்டை ஊராட்சித் தலைவரின் கணவா், வெட்டி எடுத்துச் சென்றுவிட்டாா். இதுகுறித்து கேட்டதற்கு, என்னை தாக்கி நான் வசிக்கும் வீட்டைச் சுற்றி வேலி அமைத்து, வீட்டுக்கும் பூட்டு போட்டுள்ளாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.
எனவே, இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்




வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...