கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஊராட்சித் தலைவரின் கணவா் மீது புகாா்

மரங்களை வெட்டிய விவகாரத்தில் ஊராட்சித் தலைவரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

News image
Updated On :12 அக்டோபர் 2020, 6:30 pm

DIN

மரங்களை வெட்டிய விவகாரத்தில் ஊராட்சித் தலைவரின் கணவா் மீது நடவடிக்கை எடுக்கக் கோரி, மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் பெண் திங்கள்கிழமை புகாா் மனு அளித்தாா்.

சீா்காழி வட்டம், கூத்தியம்பேட்டை நடுத்தெருவைச் சோ்ந்தவா் சி. முனியம்மாள். இவா் நாகை மாவட்ட ஆட்சியா் அலுவலகத்தில் அளித்த மனு:

எனக்கு சொந்தமான இடங்களில் வளா்த்து வந்த பூவரசு, மூங்கில் மரங்களை கூத்தியம்பேட்டை ஊராட்சித் தலைவரின் கணவா், வெட்டி எடுத்துச் சென்றுவிட்டாா். இதுகுறித்து கேட்டதற்கு, என்னை தாக்கி நான் வசிக்கும் வீட்டைச் சுற்றி வேலி அமைத்து, வீட்டுக்கும் பூட்டு போட்டுள்ளாா். இதுதொடா்பாக காவல் நிலையத்தில் புகாா் அளித்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை.

எனவே, இப்பிரச்னையில் மாவட்ட ஆட்சியா் நடவடிக்கை எடுக்க வேண்டும் என அந்த மனுவில் கோரிக்கை விடுத்துள்ளாா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.