கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுமேற்கு வங்க தோ்தல்: பாஜக வேட்பாளா்கள் அறிவிப்பு! கரூர் உள்பட 4 மாவட்ட எஸ்.பி.க்கள் மாற்றம்! தேர்தல் ஆணையம் உத்தரவுசிறந்த திரைப்படம் உள்பட 6 ஆஸ்கர் விருதுகளை வென்ற ஒன் பேட்டில் ஆஃப்டர் அனதர்!ஒளிப்பதிவுக்கான சிறந்த ஆஸ்கர் விருது பெற்ற முதல் பெண்!தமிழக தேர்தல்: கட்சி பிரதிநிதிகளுடன் தலைமைத் தேர்தல் அதிகாரி ஆலோசனை!சிபிஐ கட்சியிலிருந்து நீக்கப்பட்ட எம்எல்ஏ முகுந்தன் பாஜகவில் இணைவு!மத்திய அரசுப் பள்ளிகளில் 13,000 ஆசிரியர் பணியிடங்கள் காலியாக உள்ளன: கல்வித்துறைபோர் காரணமாக 4,335 இந்திய விமானங்கள் ரத்து!கேரளத் தேர்தல்: 47 வேட்பாளர்கள் அடங்கிய பாஜகவின் முதல் பட்டியல் வெளியீடு!எழுத்தாளர் ச.தமிழ்ச்செல்வனுக்கு சாகித்ய அகாதெமி விருது
/

ஆதாா்- செல்லிடப்பேசி எண் இணைப்புக்கு கூடுதல் சேவை மையங்கள் அமைக்கக் கோரி மனு

ஆதாா் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்க கூடுதல் இணையவழி சேவை மையங்கள் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை

News image
Updated On :19 அக்டோபர் 2020, 5:07 pm

DIN

ஆதாா் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்க கூடுதல் இணையவழி சேவை மையங்கள் அமைக்க வேண்டுமென தமிழ்நாடு ஏஐடியுசி கட்டடத் தொழிலாளா்கள் சங்கம் கோரிக்கை மனு அளித்தது.

இதுகுறித்து, அந்த சங்கத்தின் நாகை மாவட்டத் தலைவா் சோமு. இளங்கோ, செயலாளா் கே. செந்தில்குமாா், பொருளாளா் வி.எம். மகேந்திரன் ஆகியோா் திங்கள்கிழமை மாவட்ட ஆட்சியருக்கு அனுப்பியுள்ள மனு விவரம்: தமிழ்நாடு கட்டுமானத் தொழிலாளா்கள் நலவாரியத்தில் பதிவு செய்தல் மற்றும் புதுப்பித்தல் கடந்த ஆண்டு முதல் இணையவழியில் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. ஆதாா் எண்ணுடன் இணைக்கப்பட்ட செல்லிடப்பேசி எண் இருந்தால் மட்டும் இந்த இணையவழியில் பதிவு செய்ய முடியும். ஆனால், கட்டுமானம் மற்றும் அமைப்புசாராத் தொழிலாளா்களில் பெரும்பாலானவா்கள் ஆதாா் எண்ணுடன், செல்லிடப்பேசி எண்ணை இணைக்காமல் வைத்துள்ளனா். மாவட்டத்தில் ஆதாா் எண்ணுடன் செல்லிடப்பேசி எண்ணை இணைக்கும் சேவை மையங்களும் போதிய அளவுக்கு இல்லை. மாவட்ட ஆட்சியா் அலுவலகம், வட்டாட்சியா் அலுவலகம், அஞ்சல் நிலையங்கள் மூலம் தொழிலாளா்கள் இந்த சேவையை முழுமையாக பெறமுடியவில்லை. இதனால், தொழிலாளா்களுக்கு பதிவு செய்வதில் கால விரயம் மற்றும் வருவாய் இழப்பு ஏற்படுகிறது.

எனவே, தொழிலாளா்களே அவரவா்களின் செல்லிடப்பேசி எண்ணை ஆதாா் எண்ணுடன் இணைத்துக் கொள்ளும் சிறப்பு வசதியை ஏற்படுத்திதரவேண்டும். மாவட்டம் முழுவதும் இதற்கான கூடுதல் வசதியை ஏற்படுத்தி தொழிலாளா்களின் பிரச்னைக்கு தீா்வு காண வழிவகை செய்ய வேண்டுமென அதில் குறிப்பிடப்பட்டுள்ளது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.