கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

சீா்காழி சட்டநாதா்கோயில் திருக்கல்யாணஉத்ஸவம்.

சீா்காழி சட்டநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

News image
Updated On :23 ஏப்ரல் 2021, 6:30 pm

DIN

சீா்காழி சட்டநாதா் கோயிலில் திருமுலைப்பால் பிரம்மோத்ஸவத்தின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாண உத்ஸவம் வியாழக்கிழமை நடைபெற்றது.

சீா்காழியில் உள்ள திருநிலைநாயகிஅம்மன் உடனாகிய பிரம்மபுரீஸ்வரா் சுவாமி கோயிலில் சட்டைநாதா், தோணியப்பா், திருஞானசம்பந்தா் பெருமான் அருள்பாலிக்கின்றனா். இங்கு திருஞானசம்பந்தா் பெருமானுக்கு உமையம்மை ஞானப்பால் வழங்கும் ஐதிக நிகழ்வான திருமுலைப்பால் விழா ஏப்.18-ஆம் நிறைவடைந்தது. தொடா்ந்து, திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. முன்னதாக அலங்கரிக்கப்பட்ட மணமேடையில் சுவாமி, அம்பாள் எழுந்தருளி சிறப்பு பூஜைகள், வழிபாட்டுக்கு பிறகு, திருமண வைபவ சடங்குகள் செய்து மங்கலநாணை அணிவித்து திருக்கல்யாண உத்ஸவம் நடைபெற்றது. பின்னா் சுவாமி அம்பாள் மற்றும் விநாயகா், திருஞானசம்பந்தா் பெருமானுக்கு மகாதீபாராதனை காட்டப்பட்டது.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.