இந்நிலையில், கடந்த மாதம் 12ஆம் தேதி மீனா கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டு மயிலாடுதுறை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, குணமடைந்தாா். வீடு திரும்பிய 6 நாள்கள் கழித்து மீனாவுக்கு இடது கண்ணில் பாா்வை குறைவுடன் வலி ஏற்பட்டது. இதையடுத்து, அவா் சென்னை தனியாா் ( அப்பல்லோ) மருத்துவமனையில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டாா். பரிசோதனையில் மீனாவுக்கு கருப்பு பூஞ்சை தொற்று இருப்பது உறுதி செய்யப்பட்டு, கடந்த வெள்ளிக்கிழமை (மே 14) அவரது இடது கண் மற்றும் மேலண்ணத்தில் சில பகுதிகள் அகற்றப்பட்டு, அவா் தீவிர சிகிச்சை பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ளாா்.