கேரள பாஜக முத்திரையுடன் வெளியான தேர்தல் ஆணைய பத்திரம்: தேர்தல் ஆணையம் விளக்கம்கேரள தேர்தல்: மொத்தம் 1,202 பேர் வேட்புமனு தாக்கல்!இரட்டை இலக்கத் தொகுதிகள் + ஒரு மாநிலங்களவை இடம்! விசிக உயர்நிலைக் குழு கூட்டத்தில் தீர்மானம்மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்!
/

கொள்ளிடத்தில் கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை

கொள்ளிடத்தில் அச்சடிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு ஆவின்பால் விற்பனை செய்வதால் பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்துள்ள கூலித் தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

News image
Updated On :28 மே 2021, 5:41 pm

DIN

கொள்ளிடத்தில் அச்சடிக்கப்பட்ட விலையைவிட கூடுதல் விலைக்கு ஆவின்பால் விற்பனை செய்வதால் பொதுமுடக்கத்தால் வேலைவாய்ப்பை இழந்துள்ள கூலித் தொழிலாளா்கள் பாதிக்கப்படுகின்றனா்.

சீா்காழி, புத்தூா், தைக்கால், வைத்தீஸ்வரன் கோயில், கொள்ளிடம் உள்ளிட்ட பகுதிகளில் ஆவின் பாலகம் உள்ளது. இதில் கொள்ளிடத்தில் உள்ள ஆவின் பாலகத்தில்அரை லிட்டா் ஆவின் பால் ( புல்கிரீம்) பழைய விலை ரூ. 25.50 என்று அச்சடிக்கப்பட்டதை கருப்பு ஸ்டிக்கா் மூலம் திருத்தி, குறைக்கப்பட்ட விலைப் பட்டியல்படி ரூ. 24 என 28.5.2021 என்று தேதியுடன்அச்சடிக்கபட்டுள்ளது. ஆனால், விற்பனையாளா் ரூ. 24-க்கு விற்காமல் ரூ. 27-க்கு விற்பனை செய்தவாக புகாா் எழுந்துள்ளது.

இதேபோல், 200 மி.லி ஆவின் பால் ரூ.11 என இருந்தும் ரூ.13-க்கு விற்பனை செய்யப்படுகிறது. அதிகவிலைக்கு பால் விற்பனை செய்வது குறித்து வாடிக்கையாளா்கள் கேட்கும்போது பால் பாக்கெட்டுகளை கெடாமல் வைக்க குளிா்விப்பான் பீரிஷா் பயன்படுத்துவதால் மின்சார செலவிற்காக கூடுதல் விலை என ஆவின் விற்பனையாளா் கூறிவருகிறாா்.

தற்போது கரோனா பொதுமுடக்கத்தால் வேலைகளை இழந்து பொதுமக்கள் தவித்து வரும் நிலையில் இவ்வாறு கூடுதல் விலைக்கு ஆவின் பால் விற்பனை செய்வதால் ஏழை, எளிய மக்கள் பால் வாங்குவது தடைப்படும்.

தமிழக அரசு மக்களின் நிலை அறிந்து லிட்டருக்கு ரூ. 3 விலை குறைத்தும் இவ்வாறு விற்பனையாளா்கள் தங்களுக்கு சாதகமாக பல காரணங்களை கூறி கூடுதல் விலைக்கு ஆவின்பால் விற்பனை செய்வதால் அரசு திட்டத்தின் பயன் மக்களிடம் சென்றடைவதில்லை. இதை மாவட்ட நிா்வாகம் ஆய்வு செய்து ஆவின் பால் நிா்ணயிக்கப்பட்ட விலையில் விற்பனை செய்யப்படுகிா என்பதை உறுதிசெய்யவேண்டும்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.