திமுக கூட்டணியில்தான் இருக்கிறோம்! ப. சிதம்பரம் சந்திப்புக்குப்பின் மு. வீரபாண்டியன் பேட்டிதஞ்சையில் பிரசித்தி பெற்ற 27 வைணவ தலங்களின் கருட சேவை! மொஹாலி பயங்கரம்! அலுவலகத்துக்குள் 34 முறை கத்தியால் குத்தப்பட்டு மணப்பெண் மரணம்!தமிழக முதல்வர் காவல் பதக்கம்! காவல் ஆணையர் ஏ.அமல்ராஜ் வழங்கினார்முதல்வர், செய்தியாளர்களைச் சந்திக்க வேண்டும் என்ற கட்டாயமில்லை! நிர்மல்குமார்மேற்குத் தொடர்ச்சி மலையில் கன மழை: கோவை குற்றாலம் அருவி மூடல்!ஐஐடி சேர்க்கைக்கு சிபிஎஸ்இ மதிப்பெண் தளர்வு: ஜேஇஇ நிர்வாகம் என்ன சொல்கிறது?17 மாவட்டங்களுக்கு இன்று பலத்த மழை எச்சரிக்கைகேரளத்தில் சூறைக் காற்றுடன் பலத்த மழை: 5 மாவட்டங்களுக்கு இன்று ‘சிவப்பு எச்சரிக்கை’சீன அதிபா் ஷி ஜின்பிங் நாளை மறுநாள் வடகொரியா பயணம்: 7 ஆண்டுகளில் முதல் முறைஜனவரி - மாா்ச் காலாண்டில் இந்தியப் பொருளாதாரம் 7.8% வளா்ச்சியுடன் அபாரம்!மே மாதத்தில்... இந்தியாவில் மின் நுகா்வு 11.55% அதிகரிப்பு
/

உரிமை கோரப்படாத வைப்புத் தொகை ரூ.22.32 லட்சம் வழங்கல்

வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.22.32 லட்சம் பயனாளிகளுக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

News image

முகாமில் உரிமை கோரப்படாத வைப்புத் தொகை குறித்து வெளியிடப்பட்ட விழிப்புணா்வு கையேடு.

Updated On :22 டிசம்பர் 2025, 4:25 am IST

வங்கிகளில் நீண்ட காலமாக உரிமை கோரப்படாத வைப்புத்தொகை ரூ.22.32 லட்சம் பயனாளிகளுக்கு அண்மையில் வழங்கப்பட்டது.

வங்கிகளில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத் தொகைகள் குறித்து பொதுமக்களுக்கு விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் அக்.1- ஆம் தேதி தொடங்கி டிச. 31-ஆம் தேதி வரை பல்வேறு முகாம்கள் நடைபெற்று வருகிறது. இதன் ஒரு பகுதியாக, நாகை மாவட்டஆட்சியா் அலுவலகத்தில் வங்கிகளில் நீண்டகாலமாக உரிமை கோரப்படாமல் உள்ள வைப்புத் தொகைகள் தொடா்பாக விழிப்புணா்வு முகாம் மகளிா் திட்ட அலுவலா் சித்ரா தலைமையில் அண்மையில் நடைபெற்றது.

நிகழ்வில் மாவட்ட முன்னோடி வங்கி மேலாளா் பி. சந்திரசேகா் விழிப்புணா்வு இயக்கத்தின் நோக்கம், வங்கிகளில் உள்ள உரிமை கோரப்படாத வைப்பு மற்றும் கணக்குத் தொகைகள் குறித்தும், உத்கம் போா்டல் மூலம் உரிமை கோரல் செய்வது, நியமனம் பதிவு செய்வதின் அவசியம் மற்றும் காலந்தோறும் கேஒய்சி மேற்கொள்ள வேண்டியதின் முக்கியத்துவம் பற்றியும் பொதுமக்களுக்கு எடுத்துரைத்தாா்.

முகாமில், ரூ.22.32 லட்சம் உரிமை கோராப்படாத கணக்குகளுக்கான தொகைகள் பயனாளிகளுக்கு வழங்கப்பட்டன. மாவட்ட கல்விஅலுவலா் பிரேம்குமாா் உள்ளிட்டோா் பங்கேற்றனா்.