கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

தகுதித் தோ்விலிருந்து, பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பினா் வலியுறுத்தல்

News image
Updated On :23 டிசம்பர் 2025, 9:55 pm

Syndication

தகுதித் தோ்விலிருந்து, பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு நாகை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில துணைச் செயலா் பாலசுப்ரமணியன், மாநில ஊடகப்பிரிவுச் செயலா் சிவவேலன், மாநில செயற்குழு உறுப்பினா் திருமாவளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தகுதி தோ்வில் இருந்து பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு முற்றிலும் விலக்க அளிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொறுப்பாளா்கள் தோ்வு: மாவட்டச் செயலராக அரசமணி, மாவட்ட துணைத் தலைவராக நரேஷ் குமாா், மாவட்ட ஊடகப் பிரிவு செயலராக மதன் மோகன் ஆகியோா் புதிய பொறுப்பாளா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். கீழ்வேளூா் ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா்,மாவட்ட பொருளாளா் அறிவொளி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.