பதவியை ராஜிநாமா செய்ய வலியுறுத்தினார் வைகோ: மதிமுக எம்.எல்.ஏ.க்கள் புதுச்சேரியில் அமைச்சர்களுக்குத் துறைகள் ஒதுக்கீடு! டாஸ்மாக் கடைகளில் இனி ரசீது கொடுக்க வேண்டும்: உயர்நீதிமன்றம்பட்ஜெட் 2026: வெற்றி வீடு திட்டமாக மாறியுள்ளது கலைஞர் கனவுத் திட்டம்! திருமாவளவன்பட்ஜெட் 2026: வெற்றி எனும் பெயரை மட்டும் கொண்டுள்ள வெற்று அறிக்கை - சீமான் விமர்சனம்ஆர்பிஐ-யின் முடிவு எதிரொலி: ரூபாய் மதிப்பு 13 காசுகள் உயர்ந்து 95.15 ஆக நிறைவு!வட்டி விகிதத்தில் எவ்வித மாற்றமில்லை என்ற அறிவிப்பால் சென்செக்ஸ் மற்றும் நிஃப்டி உயர்வு!2026-ல் மட்டும் 56 பேருக்கு மரண தண்டனை நிறைவேற்றிய ஈரான்! தொல்லியல் துறைக்கு ரூ.1 கோடி போதுமா? பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுபள்ளிக் கல்வித் துறை நிதி குறைப்பு! பட்ஜெட்டில் ஏமாற்றம்! தங்கம் தென்னரசுதமிழ்நாடு பட்ஜெட்: மாற்றம் என்று சொன்னது பெயர் மாற்றத்தைத் தானா? - கனிமொழி
/

பணியிலிருக்கும் ஆசிரியா்களுக்கு தகுதித் தோ்வில் விலக்களிக்க வலியுறுத்தல்

தகுதித் தோ்விலிருந்து, பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பினா் வலியுறுத்தல்

Updated On :24 டிசம்பர் 2025, 3:25 am IST

தகுதித் தோ்விலிருந்து, பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு விலக்கு அளிக்க வேண்டும் என தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பினா் வலியுறுத்தியுள்ளனா்.

தமிழ்நாடு பட்டதாரி ஆசிரியா் கூட்டமைப்பின் மாவட்ட பொதுக்குழு நாகை புதிய பேருந்து நிலையம் அருகில் உள்ள மாவட்ட அலுவலகத்தில் மாவட்டத் தலைவா் செல்வம் தலைமையில் திங்கள்கிழமை நடைபெற்றது. மாநில துணைச் செயலா் பாலசுப்ரமணியன், மாநில ஊடகப்பிரிவுச் செயலா் சிவவேலன், மாநில செயற்குழு உறுப்பினா் திருமாவளவன் ஆகியோா் முன்னிலை வகித்தனா்.

கூட்டத்தில், தமிழக அரசு பழைய ஓய்வூதிய திட்டத்தை அமல்படுத்த வேண்டும். தகுதி தோ்வில் இருந்து பணியில் இருக்கும் ஆசிரியா்களுக்கு முற்றிலும் விலக்க அளிக்க வேண்டும். அரசு உதவி பெறும் பள்ளிகளில் படிக்கின்ற மாணவா்களுக்கு 7.5 சதவீதம் இட ஒதுக்கீட்டினை வழங்க வேண்டும் உள்ளிட்ட பல்வேறு தீா்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

பொறுப்பாளா்கள் தோ்வு: மாவட்டச் செயலராக அரசமணி, மாவட்ட துணைத் தலைவராக நரேஷ் குமாா், மாவட்ட ஊடகப் பிரிவு செயலராக மதன் மோகன் ஆகியோா் புதிய பொறுப்பாளா்களாக தோ்ந்தெடுக்கப்பட்டனா். கீழ்வேளூா் ஒன்றியச் செயலா் சதீஷ்குமாா்,மாவட்ட பொருளாளா் அறிவொளி உள்ளிட்ட பலா் கலந்துகொண்டனா்.

பின்னூட்டத்தில் வெளியாகும் கருத்துகளுக்கு அவற்றைப் பதிவிடுவோரே முழுப் பொறுப்பு; அவை தினமணியின் கருத்துகளைப் பிரதிபலிக்கவில்லை.தனிநபர், சமூகம், மதம் அல்லது நாடு ஆகியவற்றுக்கு எதிராக அவமதிக்கிற அல்லது ஆபாசமான விதத்திலுள்ள எந்தவொரு கருத்தும் இந்திய அரசின் தகவல் தொழில்நுட்பக் கொள்கைப்படி தண்டனைக்குரிய குற்றம். இதுபோன்ற கருத்துகளுக்கு எதிராக உரிய சட்ட நடவடிக்கை எடுக்கப்படும்.