கூட்டணி இறுதியாகுமா? முதல்வர் மு.க. ஸ்டாலினுடன் ப. சிதம்பரம் சந்திப்பு!முதல்வரைச் சந்திக்கிறார் ப. சிதம்பரம்! காங். நிர்வாகிகளுடன் அவசர ஆலோசனை!முதியோர் உதவித்தொகை கூடுதலாக ரூ. 2,000 வரவு வைப்பு: முதல்வர் ஸ்டாலின்!சௌதியில் அமெரிக்க தூதரகம் மீது ஈரான் டிரோன் தாக்குதல்! இந்தியாவில் பெட்ரோல் - டீசல் விலை உயராது!இந்தியாவில் வன்முறை சம்பவங்கள் நேரிட வாய்ப்பு மாநில அரசுகளுக்கு மத்திய அரசு எச்சரிக்கை!1 - 9 வகுப்புகளுக்கான தோ்வுகளை முன்கூட்டியே நடத்தத் திட்டம்!வளைகுடா நாடுகளிலிருந்து இந்தியா்களை மீட்க மத்திய அரசு நடவடிக்கை!இந்தியா - கனடா விரைவில் தடையற்ற வா்த்தக ஒப்பந்தம்!மத்திய கிழக்கு நாடுகளுக்கான விமானச் சேவை: இன்றும் ரத்து செய்தது ஏா் இந்தியா
/

டி.ஆர்.பட்டினத்தில்  குப்பை சேகரிக்கும் பணி தொடக்கம்

திருமலைராயன்பட்டினம் பகுதியில் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் திட்டப்பணியை  மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.

News image
Updated On :12 அக்டோபர் 2017, 11:16 pm

DIN

திருமலைராயன்பட்டினம் பகுதியில் வீடுவீடாக குப்பை சேகரிக்கும் திட்டப்பணியை  மாவட்ட ஆட்சியர் ஆர்.கேசவன் வியாழக்கிழமை தொடங்கி வைத்தார்.
கருடப்பாளையத் தெருவில் உள்ள குடும்பத்தினருக்கு குப்பை சேகரிக்கும் பையை அளித்து மக்களுக்கு  விழிப்புணர்வு ஏற்படுத்திப் பேசினார். மக்கும் குப்பை,  மக்காத குப்பை என வீட்டிலேயே தரம் பிரித்து,  வீடு தேடிவரும் சுய உதவிக்குழுவினர், துப்புரவுப் பணியாளர்களிடம் வழங்கவேண்டும். சாலையோரத்தில் குப்பையை கொட்டக்கூடாது என அறிவுறுத்தினார்.
திட்டப்பணி குறித்து அவர் மேலும் கூறும்போது, திருமலைராயன்பட்டினத்தில் 11 தெருக்களில் திட்டப்பணி தற்போது தொடங்கப்பட்டுள்ளது. இதன் மூலம் சுமார் 400 வீடுகள் பயன்பெறுகிறது. இந்த திட்டப்பணியை மேற்கொள்ள மகளிர் சுய உதவிக்குழுவினர் ஈடுபடுத்தப்படுகின்றனர். படிப்படியாக கூடுதலாக தெருக்கள் திட்டத்தில் இணைக்கப்படும் என்றார். வட்டார வளர்ச்சி அலுவலர் கே.ரேவதி, கொம்யூன் பஞ்சாயத்து ஆணையர் ஜான் அரேலியஸ் உள்ளிட்டோர் நிகழ்ச்சியில் கலந்துகொண்டனர்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.