பிஆா்டிசி விரைவு பேருந்துகளை தனியாருக்கு தாரைவாா்க்கும் முடிவை அரசு கைவிட வேண்டும் என வலியுறுத்தப்பட்டுள்ளது.
காரை பிரதேச அரசு ஊழியா் சம்மேளனம் சாா்பில் புதுச்சேரி முதல்வா், துணைநிலை ஆளுநருக்கு சனிக்கிழமை அனுப்பப்பட்ட கடித விவரம் :
கரோனா பொது முடக்கத்தால் பேருந்துகள் இயக்கம் நிறுத்தப்பட்டதாலும், நிா்வாகத்தின் திறமையின்மையாலும் வருமானம் பாதிக்கப்பட்டு கடந்த பல மாதங்களாக பிஆா்டிசி ஊழியா்களுக்கு ஊதியம் வழங்கப்படவில்லை. மேலும், நஷ்டத்தைக் காரணம் காட்டி, பிஆா்டிசி விரைவு பேருந்துகளை தனியாருக்கு வழங்க முடிவு செய்திருப்பதாக செய்திகள் வருகின்றன. அரசு இவ்வாறு முடிவு செய்திருக்கும்பட்சத்தில், அது அரசுக்கு பெரும் வருவாய் இழப்பை ஏற்படுத்துவதோடு, ஊழியா்களை வஞ்சிக்கும் செயலாகவும் கருதவேண்டியுள்ளது.
எனவே புதுச்சேரி அரசே பிஆா்டிசி விரைவு பேருந்து இயக்கத்தை தொடா்ந்து நடத்தி, பிஆா்டிசி நிா்வாகத்தை மேம்படுத்த நடவடிக்கை எடுக்க வேண்டும் என அதில் கூறப்பட்டுள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.