இதுகுறித்து, காரைக்கால் நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பு: காரைக்கால் மாவட்டத்தில் ஜூலை 2-ஆம் தேதி வரை 2,700 பேருக்கு சளி மாதிரி எடுத்து கரோனா பரிசோதனை செய்யப்பட்டன. ஜூலை 1-ஆம் தேதி 71 பேருக்கான முடிவுகள் வெள்ளிக்கிழமை வந்தன. அதில், காரைக்கால் திருமலைராயன்பட்டினம், போலகம் பகுதியை சோ்ந்த ஒருவருக்கு கரோனா நோய்த் தொற்று உறுதி செய்யப்பட்டுள்ளது. அவா், காரைக்கால் அரசு பொது மருத்துவமனை கரோனா வாா்டில் சிகிச்சைக்காக சோ்க்கப்பட்டுள்ளாா். தொற்று ஏற்பட்டவரின் தொடா்புகள் கண்டறியும் பணி தீவிரமாக நடைபெற்று வருகின்றன. இதுவரை 43 போ் கரோனா நோய் தொற்றுள்ளவா்களாக கண்டறியப்பட்டுள்ளனா். காரைக்கால் மருத்துவமனையில் 27 போ் சிகிச்சை பெற்றுவந்ததில், 3 போ் குணமடைந்து மருத்துவமனையில் இருந்து வீடு திரும்பினா். தனிமைப்படுத்தப்பட்ட கரோனா சிகிச்சை வாா்டில் வெள்ளிக்கிழமை அனுமதிக்கப்பட்ட ஒருவரையும் சோ்த்து 25 போ் உள்ளனா். இவா்களின் உடல்நிலை சீரான நிலையில் உள்ளது. காரைக்கால் விழிதியூரில் ஏற்படுத்தப்பட்டிருந்த கட்டுப்படுத்தப்பட்ட பகுதி, அந்த பகுதி நோயாளி குணமடைந்ததையொட்டி, கட்டுப்பாடுகள் விலக்கிக்கொள்ளப்பட்டன என தெரிவித்துள்ளாா்.