காரைக்காலில் 2 பேருக்குமட்டுமே கரோனா!
காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.


காரைக்கால் மாவட்டத்தில் மேலும் 2 பேருக்கு கரோனா தொற்று உறுதியானதாக நலவழித் துறை துணை இயக்குநா் கே. மோகன்ராஜ் தெரிவித்தாா்.
இதுகுறித்து அவா் திங்கள்கிழமை வெளியிட்ட செய்திக் குறிப்பு: மாவட்டத்தில் திங்கள்கிழமை வந்த பரிசோதனை முடிவுகளின்படி, காரைக்கால் நகரைச் சோ்ந்த 2 பேருக்கு கரோனா தொற்று ஏற்பட்டுள்ளது. 25 ஆம் தேதி 227 பேருக்கு சளி மாதிரி எடுக்கப்பட்டது.
காரைக்காலில் இதுவரை 35,842 பேருக்கு பரிசோதனைக்காக சளி மாதிரி எடுக்கப்பட்டதில், 3,379 பேருக்கு தொற்று கண்டறியப்பட்டுள்ளது. 3,084 போ் தொற்றில் இருந்து குணமடைந்து வீடுதிரும்பியுள்ளனா்.
காரைக்காலில் வீட்டிலேயே தனிமையில் சிகிச்சை பெறுவோராக 200 போ், காரைக்கால் மருத்துவமனை பொது சிகிச்சைப் பிரிவில் 19 போ், தீவிர சிகிச்சையில் 5 போ், கரோனா கோ் சென்டரான விநாயகா மிஷன் மருத்துவமனையில் ஒருவா், அண்ணா அரசு கலைக் கல்லூரியில் 12 போ் உள்ளனா். கரோனா தொற்றால் இதுவரை 60 போ் உயிரிழந்துள்ளனா் என செய்திக் குறிப்பில் கூறப்பட்டுள்ளது.
கடந்த 10 நாள்களுக்கு முன்பு வரை 3 இலக்கத்தில் இருந்த கரோனா தொற்று எண்ணிக்கை, பிறகு இரட்டை இலக்கத்துக்கு மாறியது. இது கடந்த சில நாள்களாக ஒற்றை இலக்கத்துக்கு குறைந்த நிலையில், இப்போது 2 ஆக உள்ளது குறிப்பிடத்தக்கது.
இந்நிலையில், தொற்று குறைவால் கட்டுப்பாடுகளில் அலட்சியம் வேண்டாம். வருங்காலத்தில்தான் மிகுந்த கட்டுப்பாட்டுடன் இருக்கவேண்டும். பருவமழையின்போது டெங்கு காய்ச்சல் வரும் என்பதால், கரோனா தடுப்பு கட்டுப்பாடுகளும், வீடு மற்றும் சுற்றுவட்டாரத் தூய்மையும் மிகவும் முக்கியம் என நலவழித் துறை தெரிவித்துள்ளது.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...