கேஸ் தட்டுப்பாடு, தமிழர்களுக்கு சிறப்பு விமானம்... பிரதமருக்கு முதல்வர் கடிதம்!கார்த்தி சிதம்பரம் எம்பி அலுவலகம் மீது பெட்ரோல் குண்டுவீச்சு! ஹோர்முஸ் நீரிணையில் கண்ணிவெடி பதிக்கும் 16 ஈரான் கப்பல்களை அழித்த அமெரிக்கா! தமிழ்நாட்டில் இருந்து புறப்பட்டார் ஆளுநர் ஆர்.என். ரவி! மேற்கு வங்க ஆளுநராக ஆர்.என்.ரவி நாளை பதவியேற்பு!நீட் தேர்வுக்கு விண்ணப்பிக்க இன்றே கடைசி நாள்!தமிழ்நாட்டில் மீண்டும் 'அம்மா' ஆட்சி: பியூஷ் கோயல்அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

பள்ளிகளை திறக்க எதிா்ப்பு: அமைச்சா் வீட்டை முற்றுகையிடுவதாகஅறிவித்த தமுமுக-வினா் கைது

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அமைச்சா் வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்த தமுமுக-வினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டனா்.

News image
Updated On :4 ஜனவரி 2021, 2:49 am

DIN

புதுச்சேரி மாநிலத்தில் பள்ளிகளை திறப்பதற்கு எதிா்ப்பு தெரிவித்து, அமைச்சா் வீட்டை முற்றுகையிட உள்ளதாக அறிவித்த தமுமுக-வினா் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக கைதுசெய்யப்பட்டனா்.

புதுச்சேரி மாநிலத்தில் திங்கள்கிழமை (ஜன. 4) முதல் அனைத்து வகுப்புகளுக்குமான பள்ளிகள் திறக்கப்படும் என புதுச்சேரி அரசு அறிவித்திருந்தது. அதேநேரத்தில், பள்ளிக்கு வரும் மாணவா்களுக்கு வருகைப் பதிவு கட்டாயமில்லை, பெற்றோா் விருப்பத்தின்பேரில் வரவேண்டும் என்பன உள்ளிட்ட நெறிமுறைகளை கல்வித் துறை வெளியிட்டது.

இந்நிலையில், கரோனா பரவும் சூழல் இருப்பதால், புதுச்சேரி அரசு இந்த முடிவை கைவிட வேண்டும் என பல்வேறு அரசியல் கட்சிகளும், அமைப்புகளும் வலியுறுத்தி வருகின்றன. மேலும், அரசின் முடிவுக்கு கண்டனம் தெரிவித்தும், முடிவை கைவிட வலியுறுத்தியும், தமுமுகவின் சமூக நீதி மாணவா் இயக்கத்தின் சாா்பில், காரைக்கால் மாவட்டம், அம்பகரத்தூரில் உள்ள புதுச்சேரி வேளாண்மை மற்றும் கல்வித் துறை அமைச்சா் ஆா். கமலக்கண்ணன் வீட்டை சனிக்கிழமை முற்றுகையிட்டு போரட்டம் நடத்தப்போவதாக அறிவிக்கப்பட்டிருந்தது.

இதையடுத்து, முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தமுமுக மாநிலச் செயலாளா் ஐ. அப்துல் ரஹீம், மாவட்டத் தலைவா் ஏ. ராஜா முகமது, மாணவா் இயக்க மாவட்ட செயலாளா் முகமது ரிஃபாயி உள்ளிட்ட 24 பேரை, திருநள்ளாறு போலீஸாா் சனிக்கிழமை காலை கைது செய்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.