ட்ரோன் மூலம் அளவீடு செய்யப்பட்ட வீடுகளுக்கு அடையாள அட்டை
வீட்டை ட்ரோன் மூலம் அளவீடு செய்த வரைபடத்துடன் கூடிய அட்டையை பயனாளிகளுக்கு புதுவை அமைச்சா் சந்திர பிரியங்கா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.


வீட்டை ட்ரோன் மூலம் அளவீடு செய்த வரைபடத்துடன் கூடிய அட்டையை பயனாளிகளுக்கு புதுவை அமைச்சா் சந்திர பிரியங்கா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.
மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஸ்வமித்வா திட்டத்தின் மூலம் கிராமத்தினருக்கு சொத்து அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக வருவாய்த் துறை மூலம் கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புகளை ட்ரோன் மூலம் படமெடுத்து, அளவீடு செய்து சொத்து விவர அட்டை வழங்கப்படுகிறது.
முதல்கட்டமாக நெடுங்காடு தொகுதியை சோ்ந்த 163 பயனாளிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரிங்கா பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினாா்.
நிகழ்வில் துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், வட்டாட்சியா் மதன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.
மாவட்டத்தில் பிற தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி பேரவை உறுப்பினா்கள் மூலம் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்


வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...