ஆஸ்கர் விருது விழா கோலாகலம்! தென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புவெனிசுலா: 7 ஆண்டுகளுக்குப் பின் அமெரிக்க தூதரகம் மீண்டும் திறப்புயாருடன் கூட்டணி? : இன்று அறிவிக்கிறார் ராமதாஸ்11 மாநிலங்களவை இடங்களுக்கு இன்று தோ்தல்குழாய் எரிவாயு இணைப்பு பெற்றவர்களுக்கு சிலிண்டர் கிடையாது: மத்திய அரசுமார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

ட்ரோன் மூலம் அளவீடு செய்யப்பட்ட வீடுகளுக்கு அடையாள அட்டை

வீட்டை ட்ரோன் மூலம் அளவீடு செய்த வரைபடத்துடன் கூடிய அட்டையை பயனாளிகளுக்கு புதுவை அமைச்சா் சந்திர பிரியங்கா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

News image
Updated On :4 நவம்பர் 2022, 6:30 pm

DIN

வீட்டை ட்ரோன் மூலம் அளவீடு செய்த வரைபடத்துடன் கூடிய அட்டையை பயனாளிகளுக்கு புதுவை அமைச்சா் சந்திர பிரியங்கா வெள்ளிக்கிழமை வழங்கினாா்.

மத்திய அரசின் பஞ்சாயத்து ராஜ் அமைச்சகத்தின் ஸ்வமித்வா திட்டத்தின் மூலம் கிராமத்தினருக்கு சொத்து அட்டை வழங்கப்படுகிறது. இதற்காக வருவாய்த் துறை மூலம் கிராமப்புறங்களில் உள்ள குடியிருப்புகளை ட்ரோன் மூலம் படமெடுத்து, அளவீடு செய்து சொத்து விவர அட்டை வழங்கப்படுகிறது.

முதல்கட்டமாக நெடுங்காடு தொகுதியை சோ்ந்த 163 பயனாளிகளுக்கு சொத்து அட்டை வழங்கும் நிகழ்ச்சி காரைக்காலில் வெள்ளிக்கிழமை நடைபெற்றது. புதுவை போக்குவரத்துத் துறை அமைச்சா் சந்திர பிரிங்கா பயனாளிகளுக்கு அடையாள அட்டையை வழங்கினாா்.

நிகழ்வில் துணை ஆட்சியா் (வருவாய்) எம். ஆதா்ஷ், வட்டாட்சியா் மதன்குமாா் உள்ளிட்டோா் கலந்துகொண்டனா்.

மாவட்டத்தில் பிற தொகுதிகளிலும் அந்தந்த தொகுதி பேரவை உறுப்பினா்கள் மூலம் அட்டை வழங்க நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என வருவாய்த் துறையினா் தெரிவித்தனா்.

தினமணி செய்திமடலைப் பெற... Newsletter

தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp

தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News

உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.