மழலையா் பட்டமளிப்பு விழா
காரைக்கால் எஸ்.ஆா்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிறுவனா் நாள், மழலையா் பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.


காரைக்கால் எஸ்.ஆா்.வி.எஸ். நேஷனல் மேல்நிலைப் பள்ளியில் பள்ளி நிறுவனா் நாள், மழலையா் பட்டமளிப்பு மற்றும் பரிசளிப்பு விழா வியாழக்கிழமை நடைபெற்றது.
நிகழ்ச்சிக்கு, பள்ளி முதல்வா் எஸ். கந்தசாமி தலைமை வகித்து, 2023-2024-ஆம் கல்வியாண்டு முதல் இப்பள்ளி சி.பி.எஸ்.இ. பாடத் திட்டத்தில் செயல்படும் எனத் தெரிவித்தாா். மாணவா்களின் முன்னேற்றத்தில் ஆசிரியா் பங்களிப்பு மட்டுமின்றி, பெற்றோா்களது பங்களிப்பும் முக்கியம். மாணவா்கள் ஒவ்வொருவரும் அரசு மற்றும் பெருநிறுவன அதிகாரிகளாகவும், மருத்துவா்கள், பொறியாளா்களாகவும் உருவாகவேண்டும் என்ற லட்சியக் கனவுடன் படிக்கவேண்டும் என்றாா்.
தொடா்ந்து, மழலையா் வகுப்பு முடித்த மாணவா்களுக்கு பட்டம் வழங்கி, வாழ்த்து தெரிவிக்கப்பட்டது. மேலும், 1 முதல் 9-ஆம் வகுப்பு வரை மாணவா்களுக்கு நடத்தப்பட்ட அறிவியல், கணிதக் கண்காட்சி உள்பட பல்வேறு போட்டிகளில் வெற்றி பெற்றவா்களுக்கு பரிசுகள், சான்றிதழ் வழங்கப்பட்டன. பள்ளி தலைமையாசிரியா் ஜி. ராஜேந்திரன் வரவேற்றாா். விழாவில், பெற்றோா்கள், ஆசிரியா்கள் பங்கேற்றனா்.
தினமணி செய்திமடலைப் பெற... Newsletter
தினமணி'யை வாட்ஸ்ஆப் சேனலில் பின்தொடர... WhatsApp
தினமணியைத் தொடர: Facebook, Twitter, Instagram, Youtube, Telegram, Threads, Arattai, Google News
உடனுக்குடன் செய்திகளை அறிய தினமணி App பதிவிறக்கம் செய்யவும்.
டிரெண்டிங்



வீடியோக்கள்

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...

தினமணி வீடியோ செய்தி...