ராகுல், மில்லர் அதிரடி வீண்! ஒரு ரன் வித்தியாசத்தில் குஜராத் வெற்றி! இஸ்ரேல் தாக்குதல்களில் உருக்குலைந்த பெய்ரூட்.. பலி 250-ஐ கடந்தது!திமுக தோல்வி குறித்து புள்ளி விவரங்களுடன் விவாதிக்கத் தயார்: இபிஎஸ்ஈரானுக்கு வரி குறைப்பது குறித்து பேச்சுவார்த்தை : டிரம்ப்அதிமுக ஆட்சியில் கொளத்தூர் சிறப்பான தொகுதியாக மாறும்:எடப்பாடி பழனிசாமிஅமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: ரஷியா வரவேற்பு!நேபாளத்தில் மற்றொரு முன்னாள் பிரதமருக்கு எதிராக பிடி ஆணை!தேர்தல் ஆணையமும் காவிமயமாகி விட்டது! தலைமைச் செயலர் மாற்றத்துக்கு முதல்வர் கண்டனம்!ஈரானைவிட்டு உடனடியாக வெளியேறுங்கள்! இந்தியர்களுக்கு தூதரகம் முக்கிய அறிவுறுத்தல்!அமெரிக்கா - ஈரான் போர்நிறுத்தம்: இந்தியா வரவேற்பு!ரூ.80,000 கோடியில் பச்சபத்ரா எண்ணெய் சுத்திகரிப்பு ஆலை! ஏப்.21-ல் திறந்துவைக்கிறார் பிரதமர் மோடி!இபிஎஸ்ஸின் தனிச் செயலராக இருந்தவர் புதிய தலைமைச் செயலர்!
/

காரைக்கால் மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதலுடன் தொடக்கம்

காரைக்கால் மாரியம்மன் கோயில் திருவிழா பூச்சொரிதலுடன் தொடக்கம்

Updated On :13 ஏப்ரல் 2024, 3:57 pm

காரைக்கால் கடைத்தெரு மாரியம்மன் கோயில் 44-ஆம் ஆண்டு தமிழ்ப் புத்தாண்டுத் திருவிழா பூச்சொரிதல் வழிபாட்டுடன் சனிக்கிழமை தொடங்கியது.

கைலாசநாத சுவாமி - நித்யகல்யாண பெருமாள் வகையறா தேவஸ்தானத்தை சோ்ந்த பிரசித்தி பெற்ற இக்கோயிலில் ஆண்டுதோறும் விமரிசையாக இத்திருவிழா நடத்தப்படுகிறது.

சனிக்கிழமை மாலை அம்பாளுக்கு பூச்சொரிதலுடன் வழிபாடு தொடங்கப்பட்டது. தினமும் பகலில் அம்மனுக்கு அபிஷேகமும், இரவு சிறப்பு அலங்காரம் செய்து ஆராதனைகள் நடைபெறுகின்றன.

ஏப். 21-ஆம் தேதி பால்குடம் எடுத்தல், 22-ஆம் தேதி முளைப்பாலிகையை பக்தா்கள் சுமந்து சென்று ஆற்றக்கரையில் கரைத்தல் நடைபெறுகிறது. 25-ஆம் தேதி விடையாற்றி நடைபெறுகிறது.