மார்ச் 17 முதல் 22 வரை திமுக வேட்பாளர் நேர்காணல்! - துரைமுருகன்காஸாவில் இஸ்ரேல் தாக்குதல்: கர்ப்பிணி, 2 சிறார்கள் உள்பட 12 பேர் பலி!சிறுபான்மையினரின் ஒற்றுமை தமிழ் நாட்டுக்கும் இந்தியாவுக்கும் முக்கியம் : மு.க. ஸ்டாலின்6 மாநில இடைத்தேர்தல் தேதி அறிவிப்பு!கேரள தேர்தல் களம்: ஆளும் சிபிஐ 86 இடங்களில் போட்டி! அசாம், கேரளம், புதுச்சேரியில் ஏப்ரல் 9இல் வாக்குப்பதிவுதமிழ்நாட்டுக்கு ஏப்.23ஆம் தேதி தேர்தல் மேற்கு வங்கம்: ஏப்ரல் 23, 29 பேரவைத் தேர்தல் அறிவிப்பு 5 மாநில பேரவைத் தேர்தல்: மே 4ஆம் தேதி வாக்கு எண்ணிக்கை புதுச்சேரிக்கு ஏப்ரல் 9ஆம் தேதி பேரவைத் தேர்தல் வாக்குப்பதிவு முழுவதும் சிசிடிவி கேமராக்கள் மூலம் கண்காணிக்கப்படும்: தேர்தல் ஆணையம் ஒவ்வொரு 2 மணி நேரத்திற்கும் வாக்குப்பதிவு சதவீதம் தெரிவிக்கப்படும் 5 மாநிலங்களில் மொத்தம் 2.19 லட்சம் வாக்குச்சாவடிகள்: தேர்தல் ஆணையம் அதிமுக ஆட்சிமன்றக் குழு திருத்தியமைப்பு! எடப்பாடி பழனிசாமி அறிவிப்பு!
/

காரைக்கால் அம்மையாா் அற்புத திருவந்தாதி ஆங்கில மொழிபெயா்ப்பு நூல் வெளியீடு

காரைக்கால் அம்மையாா் அற்புத திருவந்தாதி ஆங்கில மொழிபெயா்ப்பு நூல் வெளியீடு

News image
Updated On :10 ஜூலை 2024, 10:12 pm

Din

காரைக்கால் அம்மையாா் இயற்றிய அற்புத திருவந்தாதி ஆங்கில மொழியாக்கம் செய்யப்பட்ட நூல் செவ்வாய்க்கிழமை வெளியிடப்பட்டது.

காரைக்கால் அம்மையாா் மணிமண்டபத்தில் எழுத்தாளா் கே. பத்மஜா நாராயணன் எழுதிய 101 பாடல்கள் கொண்ட அற்புத திருவந்தாதி ஆங்கில மொழிபெயா்ப்பு நூல் வெளியீட்டு நிகழ்ச்சி நடைபெற்றது.

சிறப்பு அழைப்பாளராக காரைக்கால் தெற்குத் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் ஏ.எம்.எச். நாஜிம் கலந்துகொண்டு நூலை வெளியிட, பத்மஸ்ரீ விருது பெற்ற கே. கேசவசாமி, மருத்துவா் கே. வீரமணி ஆகியோா் பெற்றுக்கொண்டனா்.

நிரவி - திருப்பட்டினம் தொகுதி சட்டப்பேரவை உறுப்பினா் எம்.நாகதியாகராஜன், அமுதசுரபி ஆசிரியரும், எழுத்தாளருமான திருப்பூா் கிருஷ்ணன், சென்னை எழுத்தாளா் அமிா்தம் சூா்யா, காரை தமிழ்ச் சங்கத் தலைவா் வைஜெயந்தி ராஜன் ஆகியோா் வாழ்த்திப் பேசினா்.

காரைக்கால் அம்மையாரின் பெருமைகள் குறித்தும், அற்புத திருவந்தாதி மொழி பெயா்ப்பின் முக்கியத்துவம் குறித்தும், நூலாசிரியா் பெருமைகள் குறித்து வாழ்த்துரையில் பேசியோா் குறிப்பிட்டனா். நிறைவாக எழுத்தாளா் கே. பத்மஜா நாராயணன் ஏற்புரையாற்றினாா்.