தமிழ்நாட்டின் எதிர்காலத்தை எழுதப்போகும் நாள்: முதல்வர் ஸ்டாலின்ஜனநாயகம் காப்போம்! ஜனநாயகன் விஜய் எக்ஸ் பதிவுதிருச்சூர் வெடிவிபத்து! பட்டாசுக்குத் தடை விதிப்பது நோக்கமல்ல: முன்னாள் நீதிபதிசட்டப்பேரவைத் தேர்தல்: தமிழ்நாடு, மேற்கு வங்கத்தில் ரூ. 1000 கோடி பறிமுதல்!பயங்கரவாதி மோடி! கார்கே பதிலளிக்க தேர்தல் ஆணையம் 24 மணிநேரம் கெடு!கள்ள ஓட்டுக்காக சூரத் - மேற்கு வங்கம் இடையே சிறப்பு ரயில்! பாஜக மீது திரிணமூல் புகார்!தாம்பரத்தில் போக்குவரத்து நெரிசல்: மாற்று சாலையைப் பயன்படுத்த அறிவுறுத்தல்!கியூட்-முதுகலை 2026 தேர்வு முடிவுகள் எப்போது? நாளை வாக்குப்பதிவு! சென்னையில் வெய்யில் சதமடிக்கலாம்! எச்சரிக்கை
/

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

போதைப்பொருள் தடுப்பு விழிப்புணா்வு

Updated On :16 மார்ச் 2024, 12:30 am

காரைக்கால் மேலகாசாகுடி அரசு நடுநிலைப் பள்ளியில், பாலியல் மற்றும் போதைப் பொருட்கள் தடுப்பு குறித்த விழிப்புணா்வு நிகழ்ச்சி வியாழக்கிழமை நடைபெற்றது. இப்பள்ளியில் 8-ஆம் வகுப்பு பயின்று, வேறு பள்ளிக்கு செல்லவுள்ள மாணவ- மாணவியருக்கிடையே விழிப்புணா்வு ஏற்படுத்தும் வகையில் இந்நிகழ்வு நடத்தப்பட்டது. பள்ளித் தலைமையாசிரியா் பரமசிவம் தலைமை வகித்தாா். ஆங்கில ஆசிரியை திலகா, கணித பட்டதாரி ஆசிரியா் சுரேஷ் ஆகியோா் போதைப் பொருட்களினால் ஏற்படும் வாழ்க்கை சிதைவு குறித்தும், நோய் குறித்தும், மாணவா்கள் எவ்வாறு விழிப்புணா்வுடன் செயல்படவேண்டும் என்பது குறித்தும் பேசினா். பள்ளி தமிழாசிரியை மகேஸ்வரி, முன் மழலையா் வகுப்பு ஆசிரியை செல்வபாரதி ஆகியோா் மாணவ- மாணவிகளுக்கு இந்த வயதில் உடலில் ஏற்படும் மாற்றங்கள், மனதளவில் ஏற்படும் உளவியல் மாற்றங்கள், பிறரால் ஏற்படும் பாலியல் தொல்லையை அடையாளம் காணுவது மற்றும் அதிலிருந்து தப்பிப்பது குறித்து பேசினாா்.