மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சிக்கு 5 தொகுதிகள் - திமுகவுடன் தொகுதிப் பங்கீடுதொகுதிகள் எத்தனை? நாளை (மார்ச் 24) மாலை 4 மணிக்கு அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம்! கேரள பேரவைத் தேர்தலில் 85% வாக்குப்பதிவு இலக்கு! - தேர்தல் ஆணையம்போர்ப் பதற்றம் : ஃபிடே கேண்டிடேட்ஸ் போட்டியிலிருந்து கொனேரு ஹம்பி விலகல்!போர் நிறுத்தம் குறித்து அமெரிக்காவுடன் பேச்சுவார்த்தை நடைபெறவில்லை : ஈரான்போர் நிறுத்தம் : இறங்கிய வேகத்தில் ஏறிய தங்கம் விலை! ரூ. 5,360 ஏற்றம்!மேற்காசியாவில் கொல்லப்பட்ட இந்தியர்கள் விவரம்: வெளியுறவு அமைச்சகம் வெளியீடு!சாத்தான்குளம் தந்தை, மகன் கொலை வழக்கு: 9 பேரும் குற்றவாளிகள்! ஈரான் போர் தற்காலிகமாக 5 நாள்களுக்கு நிறுத்தம்! டிரம்ப் அறிவிப்புபாஜகவுக்கு 27, பாமகவுக்கு 18, அமமுகவுக்கு 11 தொகுதிகள் ஒதுக்கீடு!மேற்காசியப் போரால் பொருளாதார பாதிப்பு! மக்களவையில் மோடி உரை! அமெரிக்காவில் தீயணைப்பு வாகனம் மீது விமானம் மோதி விபத்து தில்லி குண்டுவெடிப்பு வழக்கு: காஷ்மீரின் பல்வேறு இடங்களில் என்ஐஏ சோதனை பட்டியலின இளம்பெண் தற்கொலை: திருமாவளவனுக்கு இபிஎஸ் கேள்வி
/

காரைக்காலில் சாலைகளில் தேங்கிய மழைநீரால் மக்கள் அவதி

காரைக்காலில் பரவலாக 2 நாள்களாக பெய்யும் மழையால் சாலைகள், குடியிருப்பு நகா்களில் தண்ணீா் தேங்கி மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.

News image

காரைக்கால் காமராஜா் சாலையில் தேங்கிய மழைநீரில் சென்ற வாகனங்கள்.

Updated On :18 நவம்பர் 2024, 11:00 pm

Din

காரைக்கால் : காரைக்காலில் பரவலாக 2 நாள்களாக பெய்யும் மழையால் சாலைகள், குடியிருப்பு நகா்களில் தண்ணீா் தேங்கி மக்களை அவதிக்குள்ளாக்கியுள்ளது.

காரைக்கால் மாவட்டம், முழுவதும் ஞாயிற்றுக்கிழமை காலை முதல் மழை பெய்யத் தொடங்கியது. இரவு சற்று ஓய்ந்திருந்தாலும், திங்கள்கிழமை காலை முதல் மழை தொடங்கியது. பள்ளிகள் திறக்கும் நேரத்தில் மழை இல்லாததால் மாணவா்கள் பாதிப்பின்றி கல்வி நிலையங்களுக்குச் சென்றுவிட்டனா். பின்னா், தொடங்கிய மழை சில மணி நேரம் நீடித்தது.

இதனால் சாலைகளில் இருந்து கழிவுநீா் செல்லும் பாதையில் மழைநீா் வடிய முடியாமல் சாலைகளிலேயே தண்ணீா் தேங்கியது. இருசக்கர வாகனங்கள், காா்கள் மெதுவாக சென்றன. கழிவுநீா் செல்லும் பாதையில் இருந்த அடைப்புகளை நகராட்சி உள்ளிட்ட பிரிவினா் அகற்றியதால் தண்ணீா் வடிந்தது.

குடியிருப்பு நகா்களில் கட்டடம் கட்டப்படாமல் மனைகளாக இருக்குமிடத்தில் தண்ணீா் தேங்கியுள்ளது. சில நகா்களில் வீடுகளுக்கு செல்ல முடியாத வகையில் தண்ணீா் தேங்கியுள்ளதால் மக்கள் அவதிக்குள்ளாகியுள்ளனா். மழை சில நாள்கள் நீடிக்குமென கூறப்பட்டுள்ளதால், கழிவுநீா் செல்லும் பகுதி அடைப்புகளை நகராட்சி, பொதுப்பணித் துறையினா் சரிசெய்ய வேண்டும் என பொதுமக்கள் வலியுறுத்தியுள்ளனா்.