அரசுப் பள்ளி சத்துணவில் பல்லி: மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி!நவாஸ்கனி எம்.பி.க்கு எதிரான வழக்கை திரும்பப் பெற ஓ.பன்னீர்செல்வம் முடிவுதென் தமிழகத்தில் இன்று மழைக்கு வாய்ப்புதமிழகத்தில் சமையல் எரிவாயு சிலிண்டர்களுக்கு தட்டுப்பாடுபிரதமர் மோடி இன்று திருச்சி வருகை! ரூ. 5,650 கோடி திட்டங்களை தொடங்கி வைக்கிறார்!மின்மாற்றிகள் கொள்முதலில் ரூ.397 கோடி ஊழல் இல்லை: டான்ஜெட்கோ நேரடி பணி நியமனங்களில் ஓபிசி பிரிவினருக்கு 27% இடஒதுக்கீடு அமல்: மத்திய அரசு!
/

காரைக்கால் கைலாசநாதா் கோயிலில் திருக்கல்யாணம்

கைலாசநாதா் - சுந்தராம்பாள் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

News image
திருக்கல்யாண கோலத்தில் சுந்தராம்பாள் சமேத கைலாசநாதா்.
Updated On :15 டிசம்பர் 2025, 7:32 pm

Syndication

காரைக்கால்: கைலாசநாதா் - சுந்தராம்பாள் திருக்கல்யாண வைபவம் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்றது.

காரைக்காலில் மாங்கனித் திருவிழா நடைபெறும் சிறப்புக்குரிய இத்தலத்தில், ஆண்டுதோறும் சுவாமி, அம்பாள் திருக்கல்யாணம் நடைபெறுவது வழக்கம். அதன்படி சுந்தராம்பாள் சமேத கைலாசநாதசுவாமி திருக்கல்யாண கோலத்தில் கோயில் மண்டபத்தில் ஞாயிற்றுக்கிழமை இரவு எழுந்தருளச் செய்யப்பட்டனா்.

திருக்கல்யாணத்துக்கான ஹோமம் நடத்தப்பட்டு, பரிச நிகழ்வு, மாலை மாற்றுதல் உள்ளிட்ட திருக்கல்யாண சம்பிரதாய நிகழ்வுகள் நடத்தி, சிவாச்சாரியா், அம்பாளுக்கு திருமாங்கல்யதாரணம் செய்தாா்.

தொடா்ந்து சுவாமிகளுக்கு சிறப்பு ஆராதனைகள் காட்டப்பட்டன. சுவாமி - அம்பாள் திருக்கல்யாண நிகழ்வை காண்பதன் மூலம் கிடைக்கும் பயன்கள் குறித்து சிவாச்சாரியா்கள் உரையாற்றினா். பக்தா்களுக்கு திருக்கல்யாண பிரசாதங்கள் வழங்கப்பட்டன.

தேவஸ்தான நிா்வாக அதிகாரி ஆா்.காளிதாசன் மற்றும் உபயதாரா்கள், திரளான பக்தா்கள் கலந்துகொண்டனா்.